MK Stalin Alert : உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
MK Stalin Alert : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுகவினர் வாக்கு எண்ணிக்கையின் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யார்.?
தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி தொடங்கிய தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி இறுதிக்கட்டத்தை எட்டியது. அந்த வகையில் தமிழகத்தில் 4முனை போட்டியாக தேர்தல் களம் அமைந்தது. திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என போட்டியானது உருவானது. இதில் திமுக- அதிமுக கூட்டணிகளுக்கு கடும் போட்டியாக அமைந்தது நடிகர் விஜய் தலைமையிலான தவெக, எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என கணிக்க முடியாத வகையில் தவெகவிற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாக்கு அளித்ததாக தகவல் வெளியானது. எனவே தவெக எந்த கட்சியின் வாக்குகளை பிரிக்கிறார்.? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
கருத்து கணிப்பு முடிவு என்ன.?
இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பானது வெளியானது. அதில், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பும், அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு என ஒரு சில கருத்து கணிப்பும், தவெக ஆட்சி அமைக்க வாய்ப்பு என வாய்ப்பு என கருத்து கணிப்பும் வெளியானது. இதனால் யார் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது என்ற கேள்வானது எழுந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 4 நாட்களாக கொடைக்கானலில் ஓய்வில் இருந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
அறிவாலயத்தில் ஸ்டாலின்
இதனையடுத்து இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலினை, அமைச்சர்கள் துரைமுருகன், எம் ஆர் கே பன்னீர்செல்வம், ஈரோடு முத்துசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசுனார்கள். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு தங்கள் தொகுதி வந்ததற்காக முதல்வருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர். இதே போல முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அமைச்சர் சி.வி.கணேசன் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு- துரைமுருகன்
வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என அறிவுரையை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் எப்பொழுதும் திமுக கருத்துகணிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















