மேலும் அறிய

Lok Sabha Election 2024: தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்.. யாருடனும் கூட்டணி இன்றி சுயேச்சை வேட்பாளராக களம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சொல்லிகொண்டு திரியும் ஜெயலட்சுமி என்ற பெண், நேற்று தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மகள் என்று கடந்த சில தினங்களாக மீடியா கண்ணில் தென்படும் ஜெயலட்சுமி என்ற பெண் தேனி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், யாருடனும் கூட்டணி வைக்காமல் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் 2024: 

நாடே எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இதுவரை 1437 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை தொடர்ந்து, வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. 

நேற்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன்படி, நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். அந்தவகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சொல்லிகொண்டு திரியும் ஜெயலட்சுமி என்ற பெண், நேற்று தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மகள் என கூறி வரும் ஜெயலட்சுமி:

வேட்புமனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரேமா என்ற ஜெ.ஜெயலட்சுமி என்கிற நான் உங்கள் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் மகள். நான் தேனி தொகுதியில் போட்டியிட போகிறேன். அதனால் இங்கு மனுதாக்கல் செய்ய வந்திருக்கிறேன்.

தேனி தொகுதிக்கு இப்போதுதான் வந்துள்ளேன். எல்லா சின்ன சின்ன கிராமத்திற்கும் சென்று, என்ன குறைகள் இருக்கிறதோ அதை சரி செய்வேன். அம்மா நிறைய திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறார்கள், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களும் சரி, இதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் சரி, அதை சரிவரை நிறைவேற்றவில்லை. எனவே, அத்தகைய திட்டத்தை கையில் எடுத்து சரிசெய்ய போகிறோம். 

எந்த கட்சி சார்பாகவும் போட்டியிடவில்லை. சுயேட்சையாகவே தேனி தொகுதியில் போட்டியிட போகிறேன். எம்.ஜி.ஆர்., அம்மா மக்கள் கழகம் என்ற கட்சியை தொடங்கினேன். அதற்கான பதிவு எண் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், சுயேச்சையாக நின்று வெற்றிபெற போகிறோம். 

தேனி தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்டிமென்டான தொகுதி. எப்போதும், அவருக்கு தேனி மக்கள் என்றால் தனிபாசம். இந்த மாவட்டத்தில் சில மக்கள் என்னிடம் வந்து இந்த தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார்கள். அதன் காரணமாக தேனி தொகுதியை தேர்வு செய்தேன்” என்றார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, ஜெயலலிதா தங்களுக்குதான் சொந்தம் என அதிமுக, அமமுக என்ற கட்சிகள் சொந்தம் கொண்டாடுகிறது. இதுபோக, அவரது ஆன்மாவை கையில் எடுத்து ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலே சென்று சசிகலா, தீபா தற்போது ஜெயலட்சுமி என அடுத்தடுத்து புது உறவுகள் சொந்தம் கொண்டாடி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget