மேலும் அறிய

Local Body Election | தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட 480 பேர் வேட்பு மனு தாக்கல்

காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் வேட்பு மனுதாக்கல் மந்தநிலைக்கு சென்றது. மதியத்துக்கு பிறகு மீண்டும் வேட்பு மனு தாக்கல் வேகமெடுத்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசிநாளான இன்று அதிக அளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், கூட்டணி கட்சியினருடன் சென்று அவரது தம்பியும் மேயர் வேட்பாளர் என கூறப்படும் ஜெகன் பெரியசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் வேட்பு மனுதாக்கல் மந்தநிலைக்கு சென்றது. மதியத்துக்கு பிறகு மீண்டும் வேட்பு மனு தாக்கல் வேகமெடுத்தது. பெரும்பாலான வேட்பாளர்கள் அதிக அளவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் அறை முன்பு நீண்ட வரிசையில் நின்று மனுக்களை தாக்கல் செய்தனர்.


Local Body Election | தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட 480 பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் நடந்த வேட்பு மனு தாக்கலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவடைந்தது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே நாளில் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தி.மு.க.வினர் 25 பேரும், அ.தி.மு.க.வினர் 18 பேரும், அ.ம.மு.க.வினர் 5 பேரும், பா.ம.க. 10 பேரும், மக்கள் நீதி மய்யம் 12 பேரும், பா.ஜனதா 17 பேரும், நாம் தமிழர் கட்சி 13 பேரும், சுயேச்சைகள் 66 பேரும் என மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போன்று நகராட்சிகளில் 200 பேரும், பேரூராட்சிகளில் 391 பேரும் ஆக மொத்தம் 765 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.


Local Body Election | தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட 480 பேர் வேட்பு மனு தாக்கல்

இதுவரை தூத்துக்குடி மாநகராட்சியில் 480 பேரும், கோவில்பட்டி நகராட்சியில் 276 பேரும், காயல்பட்டினம் நகராட்சியில் 126 பேரும், திருச்செந்தூர் நகராட்சியில் 140 பேரும், பேரூராட்சிகளில் ஆறுமுகநேரியில் 83 பேரும், ஆத்தூரில் 72 பேரும், ஏரலில் 69 பேரும், எட்டயபுரத்தில் 65 பேரும், கழுகுமலையில் 78 பேரும், நாசரேத்தில் 83 பேரும், சாத்தான்குளத்தில் 57 பேரும், சாயர்புரத்தில் 80 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 85 பேரும், உடன்குடியில் 106 பேரும், விளாத்திகுளத்தில் 96 பேரும், ஆழ்வார்திருநகரியில் 69 பேரும், கடம்பூரில் 33 பேரும், கயத்தாரில் 86 பேரும், புதூரில் 63 பேரும், கானத்தில் 43 பேரும், பெருங்குளத்தில் 46 பேரும், தென்திருப்பேரையில் 40 பேரும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 276 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.


Local Body Election | தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட 480 பேர் வேட்பு மனு தாக்கல்

இந்த வேட்பு மனுக்கள் இன்று முதல் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெறும். இதில் வேட்பாளர் மற்றும் அவரது ஒரு முகவர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வார்டு வாரியாக வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அதன்பிறகு வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 7 ஆம்  தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget