மேலும் அறிய

காஞ்சிபுரம் மாநகராட்சி தற்செயல் தேர்தல்.. பறக்கும் கொடிகள், தேர்தல் நடத்தை விதிகள் எங்கே..?

காஞ்சிபுரம் மாநகராட்சி, 36வது வார்டுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி, இரு வாரத்திற்கு மேலாகியும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை என குற்றச்சாட்டு

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டார்.
 
காஞ்சிபுரம் மாநகராட்சி தற்செயல் தேர்தல்.. பறக்கும் கொடிகள், தேர்தல் நடத்தை விதிகள் எங்கே..?
 
இதனால், இந்த வார்டில் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வார்டில் தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தேதியை அறிவித்ததை தொடர்ந்து 36வது வார்டில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக, சுதா (எ) சுப்புராயன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் உயிரிழந்த ஜானகிராமனின் தந்தை வேணுகோபால் போட்டியிடுகிறார். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், நகை, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், வாலாஜாபாத் வட்டார உதவி அலுவலர் கோபால் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி தற்செயல் தேர்தல்.. பறக்கும் கொடிகள், தேர்தல் நடத்தை விதிகள் எங்கே..?
 
 
36வது வார்டுக்கான தேர்தல் நடத்துவதற்காக அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம், கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் வேட்பு மனுவானது 20ஆம் தேதி முதல் பெறப்பட்டு 27ஆம் தேதி முடிவடைந்தது. இதன் அடுத்து வருகின்ற ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே, தேர்தல் நடக்கும் வார்டுக்கு உட்பட்ட மண்டலங்களில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, இரு வாரங்களுக்கு மேலாகியும், 36வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள் அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
அரசியல் கட்சி தலைவர்களின் படம், கட்சியினரின் கல்வெட்டு மறைக்கப்படவில்லை, வழக்கம்போல, அரசியல் கட்சியினரின் கொடிகள் பறப்பதால், 36வது வார்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தி விதிகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget