மேலும் அறிய

3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

மத்தியில் மீண்டும் ஆட்சியைமக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்தியில் மீணடும் ஆட்சியைமப்பதற்காக மோடி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

மீண்டும் பாஜக ஆட்சி: மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜக கூட்டணி கட்சி தலைவர்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரதிட்டமிட்டனர். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முன்மொழிந்தார். அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிமொழிந்தார்.

என்.டி.ஏ கூட்டத்தில் நடந்தது என்ன? இதனை அடுத்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி மோடி என கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். பின்னர், நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த கூட்டத்தில், மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மட்டும் இன்றி அக்கட்சி எம்பிக்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதோடு, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மோடி, "சிலர் உங்களை அணுகி உங்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்போவதாக  சொல்வார்கள். இப்போது எனது கையெழுத்துடன் ஒரு பட்டியல் வெளிவரும் தொழில்நுட்பம் உள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை என்று நான் உங்களிடம் சொல்லி கொள்கிறேன்.

அனைத்து எம்.பி.க்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த சதிகளுக்கு இரையாகி விடக்கூடாது. I.N.D.I கூட்டணி இந்தத் தேர்தல்களில் போலிச் செய்திகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அதில் அவர்கள் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வதந்திகளில் இருந்து விலகி இருங்கள். பிரேக்கிங் நியூஸ் அடிப்படையில் நாடு இயங்காது" என்றார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
Taxpayer and investor alert: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..! அக்.1 முதல் மாறப்போகும் 10 விதிகள், கூடுதல் செலவா? வரவா?
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
Embed widget