மேலும் அறிய

Temporary Teachers: இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்; தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஏன்? - மக்கள் நீதி மய்யம் கேள்வி

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5,000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழகத்தில் 2,831 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இவ்வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்குக் காத்திருக்கும்போது, தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன்?

 குறைந்த சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும். எனவே, தற்காலிக, தொகுப்பூதிய முறைகளைக் கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

நிரந்தர ஆசிரியர் நியமனமானது, தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் நடக்க வாய்ப்புள்ள  முறைகேடுகளையும், அரசியல் தலையீடுகளையும் தடுத்து நிறுத்தும். மாணவர்களுக்கு தரமான கல்வியையும், ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உறுதிப்படுத்தும். இதில் தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடி கவனம் செலுத்தி, ஆசிரியர், மாணவர் நலன்களைப் பாதுகாப்பது அவசியம்''.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது  2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை. 

இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியானது. தொடக்கக் கல்வித்துறையில் ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தற்போது ஆசிரியர்களை 1ஆம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்கப் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. 


Temporary Teachers: இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்; தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஏன்? - மக்கள் நீதி மய்யம் கேள்வி

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசு மீண்டும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. தொடக்கக் கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்துகொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்! சிபிஎஸ்இ அதிரடி!
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்! சிபிஎஸ்இ அதிரடி!
கூட்டுறவுத் துறையில் SRB-DRB தேர்வு முடிவுகள் எப்போது? கீழ்ப்பாக்கத்தில் தேர்வர்கள் போராட்டம்!
கூட்டுறவுத் துறையில் SRB-DRB தேர்வு முடிவுகள் எப்போது? கீழ்ப்பாக்கத்தில் தேர்வர்கள் போராட்டம்!
Anna University: ஆசிரியர் இல்லாமலேயே தேர்வு; அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி- திமுக அரசின் துரோகம் அம்பலமா?
Anna University: ஆசிரியர் இல்லாமலேயே தேர்வு; அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி- திமுக அரசின் துரோகம் அம்பலமா?
TN 12th Hall Ticket 2026: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம்!
TN 12th Hall Ticket 2026: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
O Panneerselvam: எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? பொறுமையாக இருந்தது ஏன்? மனம் திறந்த ஓபிஎஸ்
O Panneerselvam: எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? பொறுமையாக இருந்தது ஏன்? மனம் திறந்த ஓபிஎஸ்
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்! சிபிஎஸ்இ அதிரடி!
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு மனநலப் பயிற்சி கட்டாயம்! சிபிஎஸ்இ அதிரடி!
GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
IND T20 World Cup: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..! ஊசலாடும் இந்தியாவின் கனவு - ஸ்கை பாய்ஸ்க்கான வாய்ப்புகள்
IND T20 World Cup: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..! ஊசலாடும் இந்தியாவின் கனவு - ஸ்கை பாய்ஸ்க்கான வாய்ப்புகள்
DMK vs Congress: 41 தொகுதியா.. 21 தான் தர முடியும்.! அடித்து சொல்லும் திமுக- அலறி துடிக்கும் காங்கிரஸ் - நடப்பது என்ன.?
41 தொகுதியா.. 21 தான் தர முடியும்.! அடித்து சொல்லும் திமுக- அலறி துடிக்கும் காங்கிரஸ் - நடப்பது என்ன.?
Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
Top 10 News Headlines: பள்ளி பேருந்து விபத்து, ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் 7 பேர் பலி, ஈரான் தாக்குதல்-ட்ரம்ப் மறுப்பு - 11 மணி செய்திகள்
பள்ளி பேருந்து விபத்து, ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் 7 பேர் பலி, ஈரான் தாக்குதல்-ட்ரம்ப் மறுப்பு - 11 மணி செய்திகள்
Embed widget