மேலும் அறிய

''10 மணிக்கு முன்பே வரணும்'' யாருக்கெல்லாம்? பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு

பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், அனைத்து அலுவலக உதவியாளர்கள், பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்கே வர வேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. , அலுவலகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும் 

எந்தவொரு விடுப்பு (CL/ EL) / அனுமதியைப் பெறுவதற்கும், விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுந்த குற்றச்சாட்டு

பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அவை சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாற்றி அமைக்கப்பட்ட பணி நேரம்

முன்னதாக கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை பணி நேரம் மாற்றப்பட்டது. இதற்கு பல்வேறு சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து பழையபடியே 10 மணி முதல் 5.45 மணி வரை பணி நேரம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிரியர்களின் பணி நேரம் என்ன?

* காலை 9.00 மணி முதல் மாலை 4.10 மணி முடிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரம் செயல்படுகிறது.

* தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் மற்றும் ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் வருகை தர வேண்டும். 

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 முடிய உள்ளது.

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு வருகை தர வேண்டும்.

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
நாட்டைக் காத்தவர்களுக்கு ஒரு நற்செய்தி: நாகையில் MBBS, BDS படிக்க சிறப்புச் சான்றிதழ் வழங்கல்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget