மேலும் அறிய

விருதுநகருக்கே பெருமை.. மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் டீக்கடைக்காரர் மகள் - ஜேஇஇ தேர்வில் அரசுப்பள்ளி மாணவி அசத்தல்

விருதுநகரில் வசிக்கும் சாதாரண டீக்கடைக்காரரின் மகள் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐஐடி போன்ற இந்தியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிகள் சிலர் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் விருதுநகர் மாவட்டச் சேர்ந்த யோகேஸ்வரியும் ஒருவர். 

ஜேஇஇ தேர்வில் வென்ற அரசுப்பள்ளி மாணவி:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி. இவர் தமிழக அரசு உயர்படிப்புகளில் சேரும் நுழைவுத்தேர்வுக்காக நடத்தப்படும் நான் முதல்வன் பயிற்சியின் கீழ் படித்து வந்தார். இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்த யோகேஸ்வரி ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் அவருக்கு புகழ்பெற்ற மும்பை ஐஐடி-யில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு அவருக்கு ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டீக்கடைக்காரர் மகள்:

இதுதொடர்பாக, மாணவி யோகேஸ்வரி கூறியதாவது, என் பெயர் யோகேஸ்வரி. நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். இப்போது 12ம் வகுப்பு முடித்துள்ளேன். எனக்கு ஐஐடி மும்பையில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் படிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

அம்மா பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நான் முதல்வன் திட்டத்தில் பங்கேற்று படிக்கச் சொன்னார். நான் அங்கு சேர்ந்தேன். பின்னர், அந்த திட்டம் குறித்து சொன்னார்கள்.

தேர்ச்சி பெற்றது எப்படி?

எந்த நுழைவுத்தேர்வு எழுதினால் எந்தெந்த கல்லூரிக்கு செல்லலாம்? எந்தெந்த உயர்கல்வி படிக்கலாம்? என்று சொன்னார்கள். அது மூலமாக எனக்கு ஜேஇஇ தேர்வுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலே விண்ணப்பித்தார்கள். விண்ணப்பித்தது மட்டுமின்றி எப்படி எழுதனும்? எப்படி எல்லாம் கேள்விகள் இருக்கும்? என்றெல்லாம் சொன்னார்கள். ஜேஇஇ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். 

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு ஈரோட்டில் ஒரு 40 நாட்கள் பயிற்சி அளித்தார்கள். அங்கயும் நான் சேர்ந்தேன். அதில் சேர்ந்து ஜேஇஇ  அட்வான்ஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். கவுன்சிலிங்கில் எப்படி செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும் சொல்லிக் கொடுத்தார்கள். 

நான் முதல்வன் எனும் வரப்பிரசாதம்:

நெடுஞ்செழியன் சார் மிகவும் உதவியாக இருந்தார். அவருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி. நான் முதல்வன் திட்டம் ஏழைக்குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். 

எங்களைப் போல ஏழைக்குழந்தைகளுக்கு அது ரொம்ப நல்லா இருக்குது. அதனால், முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இந்த திட்டத்தில் என்னைப் பங்கேற்க சொன்ன விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கும் நன்றி. உயர்கல்விக்கு அனைத்து செலவையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார். அதற்கும் மிக்க நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

மிகவும் சாதாரண ஏழைப்பின்னணியை கொண்ட அரசுப்பள்ளி மாணவிக்கு புகழ்பெற்ற மும்பை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிட்டியதற்கு அந்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget