மேலும் அறிய

TNPSC Group 4 Vacancy: குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? டிஎன்பிஎஸ்சி சூசகம்!

முதல்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டதாகவும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப் 4 காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்று டிஎன்பிஎஸ்சி பதில் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள பதிவுகளின்படி, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறும்போது, ‘’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் IV பணிகள்) 2018 முதல் 2025 வரையுள்ள 8 ஆண்டுகளில், முதன்முதலாக தேர்வர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பிட இயலாது

எனவே ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் IV பணிகளுக்கான தேர்விற்கு 2025 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 2025 ஆண்டிற்கு முன்பு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இயலாது’’ என்று தெரிவித்துள்ளது.

அதேபோல டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ’’ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் IV பணிகள்) அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயது 2020ஆம் ஆண்டு 59 ஆகவும், 2021ஆம் ஆண்டு 60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் IV தேர்வின் மூலம் 2025-ஆம் ஆண்டு பணிகளின் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை, 2020ஆம் ஆண்டிற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இயலாது’’ என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலி பணி இடங்களின் எண்ணிக்கை

அந்த வகையில், முதல்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டதாகவும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதனால் காலி பணி இடங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கப்படாது என்றே தெரிகிறது.

குரூப் 4 தேர்வும் தேர்வு முடிவுகளும்

முன்னதாக, தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3 ஆயிரத்து 935 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜுலை மாதம் 4ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செப்டம்பர் மாதம், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் காலியிடங்கள் 4,662 ஆக உயர்ந்தன.

பின்னர் அக்டோபர் 22ஆம் தேதி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தன. தற்போது சான்றிதழ் பதிவேற்றத்துக்கான அவகாசம் நவம்பர் 7ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
VIT University : ’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!
’உலக தர வரிசை பட்டியலில் 597வது இடம்’ சாதனை படைத்த வேலூர் VIT பல்கலைக்கழகம்..!
Incentives for students : மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.! இன்று முதல் விண்ணப்பிக்க அரசு அழைப்பு- யார் யாருக்கெல்லாம்.?
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்
CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தத்தில் என்னதான் குளறுபடி? மென்பொருள் நிறுவனம் விளக்கம்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
C. Mahendran : ’மோசடிக்கு துணைபோனவர்’ தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் மீது CPI கடும் தாக்கு…!
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
TNTET Exam Hall Ticket: ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது! ஜூலை 4, 5ல் தேர்வு- பெறுவது எப்படி?
Israel Attack Lebanon: அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
கடல் கடந்தும் வீசும் 'விஜய்' அலை: கத்தாரை அதிரவைத்த தமிழக வெற்றிக் கழகத்தின் முப்பெரும் விழா!
EPFO 3.0 Launch: சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சம்பளதாரர்களுக்கு குட் நியூஸ்.! இனி UPI, ATM-ல ஈசியா PF பணத்த எடுக்கலாம்; விரைவில் வருது EPFO 3.0
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
சட்டமன்றத்தில் இருமுறை தேசியகீதம்.! திமுக- தவெக காரசார விவாதம்- இன்று நடந்தது என்ன.?
Embed widget