மேலும் அறிய

TNPSC Chairman: டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்; ஆளுநர் கேள்விகளுக்கு விரைவில் பதில்: தமிழ்நாடு அரசு தகவல்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசின் கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்தும் ஆளுநர் விளக்கம் கேட்டு இருந்தார். அதேபோல தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியானது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது என்ற சூழலில், 61 வயது நபரை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஆளுநர் கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்டுள்ள கேள்விகளுக்கு, விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

தொடரும் மோதல் போக்கு

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து, மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் மோதல் போக்கு நிகழ்ந்து வருகிறது. நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா என பல்வேறு கோப்புகளை சர்ச்சை காரணமாக ஆளுநர் நிறுத்தி வைத்தார். 

பொது பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை என, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கோவை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கத் தலைவர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், ''பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லுாரிகள் தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுப்பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை'' என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசின் கோப்பையும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

யாரின் பெயர் பரிந்துரை?

நாகர்கோவிலைச் சேர்ந்த 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு. இவர் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்று ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, ஆளுநர் கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அதிரடி
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Breaking News LIVE: திருப்பத்தூர்: சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வருகை
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
சாதி மறுப்பு திருமணம்: நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
கஞ்சா விற்பனையில் போட்டா போட்டி! பெற்றோர் கண் முன்னே 20 வயது இளைஞர் கொடூர கொலை! நடந்தது என்ன?
Embed widget