மேலும் அறிய

Periyar University: பெரியார்‌ பல்கலை.யில்‌ முறைகேடுகள், ஊழல்: பட்டியலிட்டு விசாரணைக் குழு அமைத்த அரசு - பகீர் விவரம்

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்துள்ளது.

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்துள்ளது. இக்குழு விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை அரசு முதன்மைச்‌ செயலாளர் தா. கார்த்திகேயன்‌ தெரிவித்துள்ளதாவது:‌

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக பல புகார்கள்‌ அரசிடம்‌ பெறப்பட்டு வருகின்றன. அவற்றுள்‌ சில புகார்கள்‌ வருமாறு :-

* உடற்கல்வி இயக்குநர்‌ நியமனத்தில்‌ பல்கலைக்கழக மானியக் குழுவின்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்றப்படாதது.

* பல்கலைக்கழக நூலகர்‌ மற்றும்‌ உடற்கல்வி இயக்குநர்‌ ஆகிய பதவிகள்‌ (தமிழ்நாடு அரசின்‌ 200 புள்ளிகள்‌) இடஒதுக்கீடு ஆணையின்படி நிரப்பப்படாதது.

* தமிழ்த்துறை தலைவர்‌ பெரியசாமி என்பவரின்‌ நியமனத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகளான போலி சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணைகள்‌ நடைபெற்றுவரும்‌ நிலையில்‌, இவரை விட பலர்‌ பணியில்‌ சீனியராக இருக்கும்‌ நிலையில்‌ பணியில்‌ இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம்‌ செய்ய பரிந்துரை செய்து, விதிகளுக்கு புறம்பாக நியமித்தது.

* பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ காலியாகும்‌ உதவிப்பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்பும்‌ குழுவில்‌ பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர்‌ இடம்பெறவேண்டும்‌ என்ற  அடிப்படையில்‌, விதிகளுக்கு புறம்பாக பெரியசாமி என்பாரை முறைகேடாக நியமித்தது.

* பல்வேறு குற்றச்செயல்களில்‌ சம்பந்தப்பட்ட நெல்சன்‌ என்பவரை துணைவேந்தரின்‌ உதவியாளராகவும்‌, இவரின்‌ அனைத்து குற்றங்களிலும்‌ கூட்டாளியாக செயல்பட்ட குழந்தைவேல்‌ என்பவரை பதிவாளர்‌ அலுவலகத்தில்‌ முக்கிய பொறுப்பிலும்‌ முறைகேடாக நியமனம்‌ செய்தது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பிரிவு அலுவலராக பணியாற்றிவரும்‌ ராஜமாணிக்கம்‌ என்பவர்‌ ஆசிரியர்‌ நியமனம்‌ மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றில்‌ பணபரிமாற்றம்‌ உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌ செய்துள்ளது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ சுமார்‌ 450 பணியாளர்கள்‌ பணியாற்றிவரும்‌ நிலையில்‌, சுமார்‌ 18 மாணவர்களை பணப்பரிமாற்றம்‌ உள்ளிட்ட பல முறைகேடுகளுக்கு பிறகு மணிக்கணக்கு அடிப்படையில்‌ பணியமர்த்தப்பட்டது.

* பெரியார்‌ பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில்‌ மாணவர்கள்‌ இணையவழியாக பயில்வதற்கான முறை ஆரம்பிக்கப்பட்டு, இதற்கு சாப்ட்வேர்‌ ஒன்றினை முறைகேடாக, கொள்முதல்‌ விதிகளை மீறி கணினி அறிவியல்‌ துறைத்‌ தலைவர்‌ தங்கவேல்‌ அவரின்‌ உறவினர்‌ நிறுவனத்தில்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர அங்கீகாரம்‌ (NAAC) பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள செலவின வகையில்‌ ரூ.1.30 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளாதாக தெரியவருகிறது. ஆனால்‌ இவற்றில் பெரும்பாலான ரசீதுகள்‌ பல்கலைக்கழக நூலகர்‌ ஜெயப்பிரகாஷ்‌ என்பவரால்‌ போலியாக தயார் செய்யப்பட்டு மோசடி நடைபெற்றது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டியல்‌ இன, பட்டியல்‌ பழங்குடியினர்‌ உரிமைகள்‌ மறுக்கப்படுகிறது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிண்டிகேட்‌ உறுப்பினர்‌ நியமனத்தில்‌ விதிமீறல்‌

* பெரியார்‌ பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்‌ பதவிக்கு தலித்‌ பேராசிரியர்களை புறக்கணித்தது. 

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்பட்டு வரும்‌ தொலைதூரக் கல்விக்கு பல்கலைக்கழக மானியக்‌ குழு தடை விதித்துள்ளது.

மேற்கண்ட நிலையில்‌, சேலம்‌, பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித்‌ துறை அரசு கூடுதல்‌ செயலாளர்‌ சு.படினிசாமி மற்றும்‌ அரசு இணைச்‌ செயலாளர்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌ ஆகியோர்‌ கொண்ட விசாரணை குழு அமைக்கப்படுகிறது.‌ இக்குழு கீழ்க்கண்ட முறைகேடுகள்‌ குறித்து விசாரணை செய்யவும்‌ அரசு ஆணையிடுகிறது.

i) பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற மேற்குறிப்பிட்ட 13 குற்றச்சாட்டுக்கள்‌ தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

ii) இது போன்ற தவறுகள்‌ மீண்டும்‌ நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

iil) 'இத்தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள்‌ / அலுவலர்கள்‌ குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

மேலும்‌ மேற்கண்ட குழுவானது விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்‌. இக்குழுவின்‌ விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதிகளை பெரியார்‌ பல்கலைக்கழகம்‌ செய்து தரவேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget