மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Periyar University: பெரியார்‌ பல்கலை.யில்‌ முறைகேடுகள், ஊழல்: பட்டியலிட்டு விசாரணைக் குழு அமைத்த அரசு - பகீர் விவரம்

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்துள்ளது.

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்துள்ளது. இக்குழு விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இதுகுறித்து உயர் கல்வித்துறை அரசு முதன்மைச்‌ செயலாளர் தா. கார்த்திகேயன்‌ தெரிவித்துள்ளதாவது:‌

சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக பல புகார்கள்‌ அரசிடம்‌ பெறப்பட்டு வருகின்றன. அவற்றுள்‌ சில புகார்கள்‌ வருமாறு :-

* உடற்கல்வி இயக்குநர்‌ நியமனத்தில்‌ பல்கலைக்கழக மானியக் குழுவின்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்றப்படாதது.

* பல்கலைக்கழக நூலகர்‌ மற்றும்‌ உடற்கல்வி இயக்குநர்‌ ஆகிய பதவிகள்‌ (தமிழ்நாடு அரசின்‌ 200 புள்ளிகள்‌) இடஒதுக்கீடு ஆணையின்படி நிரப்பப்படாதது.

* தமிழ்த்துறை தலைவர்‌ பெரியசாமி என்பவரின்‌ நியமனத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகளான போலி சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணைகள்‌ நடைபெற்றுவரும்‌ நிலையில்‌, இவரை விட பலர்‌ பணியில்‌ சீனியராக இருக்கும்‌ நிலையில்‌ பணியில்‌ இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம்‌ செய்ய பரிந்துரை செய்து, விதிகளுக்கு புறம்பாக நியமித்தது.

* பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ காலியாகும்‌ உதவிப்பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்பும்‌ குழுவில்‌ பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர்‌ இடம்பெறவேண்டும்‌ என்ற  அடிப்படையில்‌, விதிகளுக்கு புறம்பாக பெரியசாமி என்பாரை முறைகேடாக நியமித்தது.

* பல்வேறு குற்றச்செயல்களில்‌ சம்பந்தப்பட்ட நெல்சன்‌ என்பவரை துணைவேந்தரின்‌ உதவியாளராகவும்‌, இவரின்‌ அனைத்து குற்றங்களிலும்‌ கூட்டாளியாக செயல்பட்ட குழந்தைவேல்‌ என்பவரை பதிவாளர்‌ அலுவலகத்தில்‌ முக்கிய பொறுப்பிலும்‌ முறைகேடாக நியமனம்‌ செய்தது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பிரிவு அலுவலராக பணியாற்றிவரும்‌ ராஜமாணிக்கம்‌ என்பவர்‌ ஆசிரியர்‌ நியமனம்‌ மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றில்‌ பணபரிமாற்றம்‌ உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌ செய்துள்ளது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ சுமார்‌ 450 பணியாளர்கள்‌ பணியாற்றிவரும்‌ நிலையில்‌, சுமார்‌ 18 மாணவர்களை பணப்பரிமாற்றம்‌ உள்ளிட்ட பல முறைகேடுகளுக்கு பிறகு மணிக்கணக்கு அடிப்படையில்‌ பணியமர்த்தப்பட்டது.

* பெரியார்‌ பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில்‌ மாணவர்கள்‌ இணையவழியாக பயில்வதற்கான முறை ஆரம்பிக்கப்பட்டு, இதற்கு சாப்ட்வேர்‌ ஒன்றினை முறைகேடாக, கொள்முதல்‌ விதிகளை மீறி கணினி அறிவியல்‌ துறைத்‌ தலைவர்‌ தங்கவேல்‌ அவரின்‌ உறவினர்‌ நிறுவனத்தில்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர அங்கீகாரம்‌ (NAAC) பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள செலவின வகையில்‌ ரூ.1.30 கோடி கணக்கு காட்டப்பட்டுள்ளாதாக தெரியவருகிறது. ஆனால்‌ இவற்றில் பெரும்பாலான ரசீதுகள்‌ பல்கலைக்கழக நூலகர்‌ ஜெயப்பிரகாஷ்‌ என்பவரால்‌ போலியாக தயார் செய்யப்பட்டு மோசடி நடைபெற்றது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ பட்டியல்‌ இன, பட்டியல்‌ பழங்குடியினர்‌ உரிமைகள்‌ மறுக்கப்படுகிறது.

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ சிண்டிகேட்‌ உறுப்பினர்‌ நியமனத்தில்‌ விதிமீறல்‌

* பெரியார்‌ பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்‌ பதவிக்கு தலித்‌ பேராசிரியர்களை புறக்கணித்தது. 

* பெரியார்‌ பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்பட்டு வரும்‌ தொலைதூரக் கல்விக்கு பல்கலைக்கழக மானியக்‌ குழு தடை விதித்துள்ளது.

மேற்கண்ட நிலையில்‌, சேலம்‌, பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித்‌ துறை அரசு கூடுதல்‌ செயலாளர்‌ சு.படினிசாமி மற்றும்‌ அரசு இணைச்‌ செயலாளர்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌ ஆகியோர்‌ கொண்ட விசாரணை குழு அமைக்கப்படுகிறது.‌ இக்குழு கீழ்க்கண்ட முறைகேடுகள்‌ குறித்து விசாரணை செய்யவும்‌ அரசு ஆணையிடுகிறது.

i) பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்ற மேற்குறிப்பிட்ட 13 குற்றச்சாட்டுக்கள்‌ தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

ii) இது போன்ற தவறுகள்‌ மீண்டும்‌ நிகழாதவாறு தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பான வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

iil) 'இத்தவறுக்கு பொறுப்பான அதிகாரிகள்‌ / அலுவலர்கள்‌ குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

மேலும்‌ மேற்கண்ட குழுவானது விசாரணை அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள்‌ அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்‌. இக்குழுவின்‌ விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதிகளை பெரியார்‌ பல்கலைக்கழகம்‌ செய்து தரவேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget