மேலும் அறிய

விதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

இன்று நடைபெறும் முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், 2021-22 ஆம் கல்வியாண்டில் +1 வகுப்பில் மாணவர் சேர்கைக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அரசு விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும், எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையினை திட்டவட்டமாக நிறுத்துதல் கூடாது என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததையொட்டி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் கடந்த ஜூன் 14ம் தேதி முதல்  தொடங்கியது.

பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்  என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.


விதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

வகுப்புகள் சரியாக நடைபெறாத காரணத்தினாலும், தொடர் ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையாலும், கடந்தாண்டு தனியார் பள்ளிகளை விட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கூடுதலாக இருந்தது. இந்தாண்டும்,அதே போக்கு  தொடரும் என்று கணிக்கப்படுகிறது. எனவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில்  விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், மாணவர்களின் சேர்க்கையின் போது எவ்விதமான படிவத்துக்கும் கட்டணங்கள் வசூலிக்க கூடாது என்றும் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.  

அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மேலும், 11ம் வகுப்பில்  மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட  நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தது.   


விதிகளின் படி மாணவர்கள் சேர்க்கை; பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

இதற்கிடையே, முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை காணொலிக்காட்சி மூலம் நடைபெறுகிறது.  இதில், 2021-22 ஆம் கல்வியாண்டில் +1 வகுப்பில் மாணவர் சேர்கைக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், 2020 2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியலை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் பதிவிறக்கம் செய்து, பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை உடன் மேற்கொள்ள அறிவுரை வழங்குதல்,

TN Class 11 Admissions: பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம்

மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் / சுயநிதி பள்ளிகளில் பயிலும் அனைத்து பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு வகுப்பு மாணவர்களின் பெயர்களும் பெயர்பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்தல்" போன்றவை விவாதிக்கப்படுகிறது.   

முன்னதாக, நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தனியார் பள்ளிகள் நடக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். நேற்று, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
School Reopening: புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget