மேலும் அறிய

கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தி கொண்டார்களா?  பள்ளி திறப்பதற்கான கட்டமைப்பு எவ்வாறு உள்ளது ? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.

நாளை முதல் தமிழகத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை தொடங்க உள்ள நிலையில், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்வரும் தகவல்களை தெரிவித்தார். 


கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் எப்படி உள்ளது, வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூடம் மற்றும் மாணவர்கள் அமரும் டேபிள் எப்படி உள்ளது. கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்து முதல்வரிடம் கொடுக்கப்படும். தனியார் பள்ளிகள் பள்ளிக்கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என உத்தரவு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள், 75 சதவீதம் கல்வி கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்றும், அதையும் 30 சதவீதம் ஒரு தவணையாகவும், 45 சதவீதம் ஒரு தவணையாகவும் வசூல் செய்யலாம் என நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்துள்ளது.


கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தனியார் பள்ளிகள் நடக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையிலுள்ள சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் ஆட்சியைக் இழக்க நேரிடும் என சுப்ரமணியசாமி கூறிய கருத்திற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சுப்ரமணிய சாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. மாணவிகள், பொதுமக்கள் அளிக்கப்பட்டுள்ள புகார் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு உண்மை என்ற பட்சத்தில் அது யாராக இருந்தாலும், ஆசிரியராக இருந்தாலும், பள்ளி நிர்வாகமாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார். யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படுவார்.


கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நீட் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளனர். அறிக்கை வந்த பின்பு அதன் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் பள்ளி திறப்பது தொடர்பாகத்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட மைய நூலகத்தை ஆய்வு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நரிகட்டியூர் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் க.பரமத்தி ஆரம்பப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக கரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.


கரூர் : சுப்ரமணியன் சுவாமி கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

குறிப்பாக ஆசிரியர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தி கொண்டார்களா?  பள்ளி திறப்பதற்கான கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தமிழகத்தில் முழு தளர்வுகள் அளித்த பிறகு பள்ளி திறப்பது குறித்து முதல்வர் முடிவு  எடுப்பார். என்று கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
இன்று எங்கெல்லாம் கனமழை வரப்போகுது? சென்னைக்கு இருக்கா? : வானிலை மையம்வெளியிட்ட எச்சரிக்கை!
Minister Keerthana:
Minister Keerthana: "பல இடங்களில் சிப்காட் பொட்டல்காடாகத்தான் உள்ளது.." திமுக-வை விளாசிய அமைச்சர் கீர்த்தனா
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget