நாளை வெளியாகும் பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள்! காண்பது எப்படி? அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
11ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வின் மறு மதிப்பீடு / மறு கூட்டல் தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்த செய்திக் குறிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜூலை- 2025, மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வு எழுதி, மறுகூட்டல் (Re- total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேதர்வர்களது பதிவெண்களின் பட்டியல் நாளை வெளியாக உள்ளது.
காண்பது எப்படி?
மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் 25.08.2025 ( திங்கட் கிழமை) அன்று பிற்பகல் முதல் வெளியிடப்பட உள்ளது. இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படு கிறது.
மறுகூட்டல் /மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு Geis தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
2025ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியாகின. இதில் தேர்ச்சி பெறாதோருக்கு, துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடைபெற்றன. இவர்களுக்கான மறு கூட்டல், மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.






















