மேலும் அறிய

Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

 சராசரியாக ஒரு மாணவரிடம் இருந்து 1800 முதல் 3500 ருபாய் வரை கட்டணமாக வசூலிக்க சொல்லி சுற்றறிக்கை வந்துள்ளது. இந்த தேர்வு கட்டணத்தை மாணவர்கள்  செலுத்தினால் செல்லாது என்றும், அந்தந்த கல்லூரி முதல்வர்கள்தான் மாணவர்களிடம் பணம்  வசூல் செய்து அதனை மொத்தமாக பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளனர் . 

தேர்வு கட்டண உயர்வால் ஏற்கனவே விரக்தியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் . இந்த வருடம் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்று உறுதிப்படுத்தமுடியாத சூழ்நிலையில் , பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வுக்கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி வந்திருக்கும் சுற்றறிக்கை மாணவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டுக்கு முன்னர் மெட்ராஸ் யூனிவர்சிடியின் முதுகலை படிப்பிற்கான விரிவாக்க மையமாக செயல்பட்டுக்கொண்டிருந்த வேலூர்  மெட்ராஸ் யூனிவர்சிட்டி கட்டிடம், மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பாலும், நிர்வாக காரணங்களாலும் வேலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி உருவாக்கப்பட்டது .  


Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

தற்போது வேலூரை அடுத்த சேர்க்காட்டில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 124 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை இதன் உறுப்பு கல்லூரிகளாய் கொண்டுள்ளது. வேலூர்  , திருவண்ணாமலை , விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகளில் பொருளாதாரம் , விலங்கியல் , வேதியல் , மானுடவியல், அரசியல் , கணினி உற்பட 33 வகையான துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு கட்டணம் செலுத்தும்படி வந்திருக்க கூடிய சுற்றறிக்கை மாணவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது .    

இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர் ஒருவர் "கொரோனா நோய் பரவலுக்கு முன்பே , தேர்வு கட்டணங்கள் , ஒரு பாடத்திற்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தியது பல்கலைக்கழகம். மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக தேர்வு கட்டண உயர்வு ஒரு பகுதி குறைக்கப்பட்டது. தற்பொழுது இருக்கக்கூடிய ஊரடங்கு சூழ்நிலையில், உடனடியாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பல்கலைக்கழக உத்தரவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த மாணவர். இவரை தொடர்ந்து, ABP நாடு செய்தி குழுமத்திற்கு பேட்டி அளித்த தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் செய்யாறு கிளை தலைவர் ஞா சுப்பிரமணியம் "திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கிராம பகுதிகளை சார்ந்த , விவசாய மற்றும் கூலி தொழில் பின்புலத்தை உடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் .    

இந்த ஊரடங்கு காலத்தில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மாணவர்களின் குடும்பம் போராடி கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தேர்வு நடக்குமா நடக்காதா என்று உறுதிப்படுத்தாத சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் 10-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை வசூல் செய்து அதை மொத்தமாக பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது . 


Thiruvalluvar university : தேர்வுக் கட்டணம் செலுத்துமாறு சுற்றறிக்கை : மாணவர்கள் விரக்தி . 

 சராசரியாக ஒரு மாணவரிடம் இருந்து 1800 முதல் 3500 ருபாய் வரை கட்டணமாக வசூலிக்க சொல்லி சுற்றறிக்கை வந்துள்ளது. இந்தத் தேர்வு கட்டணத்தை மாணவர்கள்  செலுத்தினால் செல்லாது என்றும், அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தான் மாணவர்களிடம் பணம்  வசூல் செய்து அதனை மொத்தமாக பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளனர் . 

வரும் ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்தினால் அபராதம் கிடையாது என்றும், ஜூன் 14-ஆம் தேதி வரை அபாரத்துடன் செலுத்தலாம் என்றும் அதன் பின்னர் செலுத்தும் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்திருக்கின்றது. ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறிய பாலசுப்ரமணியம், தமிழ் நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு தேர்வு கட்டணத்தை  ரத்து செய்து மாணவர்களை நேரடியாக தேர்வுகளில் பங்குபெறச் செய்வதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கேட்டு கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget