மேலும் அறிய

Aadhaar in School: மாணவர்களே இனி அலைய வேண்டாம்.. உங்கள் பள்ளி தேடி வரும் ஆதார் பதிவு முகாம்.. விவரம் இதோ

மாணவர்கள் அரசு வழங்கும் உதவித்தொகையை எந்த சிரமமுமின்றி பெற பள்ளிகளில் இன்று முதல் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மாணவர்களுக்கான ஆதார் அட்டை வழங்கும் முகாம் இன்று முதல் பள்ளிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு ஆதார் என்பது அவசியமாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை ஆதார் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் அரசு திட்டம் மூலம் கிடைக்கும் உதவித்தொகை ஆகியவை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வங்கி கணக்கு தொடங்குவதற்கும் ஆதார் தேவை என்பதால் பள்ளிகளில் ஆதார் முகாம்கள் இன்று நடைபெறுகிறது.

வழக்கமாக புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பம், ஆதாரில் திருத்தங்கள் ஆகியவை இ சேவை மையத்தில் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது மாணவர்களுக்காக பிரத்யேகமாக பள்ளிகளில் இதற்கான முகாம்கள் அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

தமிழ்நாட்டில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசி உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவு எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்கள் அதாவது பெற்றோர் பெயர், தொலைப்பேசி எண், முகவரி, ஆதார் எண் ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும். ஆனால் இதில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆதார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க ஆதார் அவசியமாகிவிட்டது.

இதனால் மாணவர்கள் எந்த சிரமமும் இன்றி ஆதார் அட்டையை பெற பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இந்த முகாம்களை பள்ளிகளிலேயே நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார். ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படி வெளியே அனுப்பவும் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"சிறப்பு மதிப்பெண் வேண்டாம்.. சிறப்புத் தேர்வு நடத்துங்கள்" - ஆசிரியர் செந்தில்குமார் யோசனை.
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
NIT திருச்சியில் 122 பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget