மேலும் அறிய

TN 10th,12th Result 2022: நெல்லையில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி அதிகம்

நெல்லையில் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் 94.63% பேரும் 12 ஆம் வகுப்பில் 98.15% பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மொத்த தேர்ச்சி சதவிகிதத்தை கல்வித் துறை வெளியிட்டது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் மொத்தமாக 9,12,620 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில்  4,52,499 பேர் மாணவியரும், 4,60,120 பேர் மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 4,27,073 பேர் என 94.38% பேரும், மாணவர்கள் 3,94,920 பேர் என 85.83 % பேரும்  என மொத்தமாக 8,21,994 பேர் என 90.07 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, சேரன்மகாதேவி, வள்ளியூர் ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்வு 91 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 96 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 156 நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 1892 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இந்த சூழலில் வெளியான தேர்வு முடிவில்  நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தமாக 23,290 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 11,805 பேர் மாணவியரும்,  11,485 பேர் மாணவர்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 11,171 பேர் என 94.63% பேரும், மாணவர்கள் 9,488 பேர் என 82.61% பேரும்  என மொத்தமாக 20659 பேர் என 88.70 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 


TN 10th,12th Result 2022: நெல்லையில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சி அதிகம்

12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் மொத்தமாக 8,06,277 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில்  4,21,622 பேர் மாணவியரும், 3,84,655 பேர் மாணவர்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 4,06,105 பேர் என 96.32% பேரும், மாணவர்கள் 3,49,893 பேர் என 90.96% பேரும்  என மொத்தமாக 7,55,998 பேர் என 93.76 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.   குறிப்பாக நெல்லையில் 182 பள்ளிகளில் 73 மையங்கள் அமைக்கப்பட்டன. 10 மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய மையங்களாக தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது, மேலும் இந்த தேர்வில் 361 தனித்தேர்வர்கள் மற்றும் 7 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறை வாசிகள் ஆகியோர் தேர்வு எழுதினர்.

இன்று வெளியான 12 ஆம் வகுப்பு தேர்வில்  நெல்லை மாவட்டத்தில் மொத்தமாக 20,090 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 10,999 பேர் மாணவியரும்,  9091 பேர் மாணவர்களும் ஆவர். இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரத்தை பொறுத்தவரை மாணவியர் 10,796 பேர் என 98.15% பேரும், மாணவர்கள் 8,505 பேர் என 93.55% பேரும்  என மொத்தமாக 19,301 பேர் என 96.07% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 

மொத்தமாக நெல்லையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget