மேலும் அறிய

TAHDCO HCL Tie Up: இலவசப் பயிற்சியுடன் ஊக்கத்தொகை; லட்சக்கணக்கில் ஊதியம் - பிளஸ் 2 முடித்தோருக்கு அருமையான வாய்ப்பு

பிளஸ் 2-ல் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்கள் லட்சக்கணக்கான ஊதியத்தை அளிக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பில் சேரலாம்.

பிளஸ் 2-ல் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்கள் லட்சக்கணக்கான ஊதியத்தை அளிக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பில் சேரலாம். ஹெச்சிஎல் நிறுவனத்துடன் தாட்கோ அரசு நிறுவனம் இணைந்து இந்தப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பை தாட்கோ மூலம் ஹெச்சிஎல் நிறுவனம் வழங்க உள்ளது.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதல் ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். முதல் 6 மாதங்களுக்கு இணைய வழியில் பயிற்சிகள்வழங்கப்படும். பயிற்சிக்கு தேவையான மடிக்கணினியை ஹெச்சிஎல் நிறுவனமே வழங்கும்.

அடுத்த 6 மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோமற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில்அமைந்துள்ள ஹெச்சிஎல் நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். முதல் ஆண்டில் ஆறாவது மாதம் முதல் மாணவர்களுக்கு நிறுவனம் வாயிலாக ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இரண்டாம் ஆண்டில் மாணவர்களுக்கு 3 விதமான கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் பட்டப் படிப்பு பயில வழிவகை செய்யப்படும். அதன்படி ராஜஸ்தானில் உள்ள இந்தியாவிலேயே மதிப்பு மிக்க பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி டிசைன் அண்ட் கம்ப்யூட்டிங், பாடப்பிரிவில் சேர்க்கப்படுவர்.

இது பிடெக் படிப்புக்கு சமமானதாகும். இந்த 4 ஆண்டு பட்டப் படிப்பை ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இக்கல்லூரியில் சேர 12-ம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல், தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தகுதிக்கேற்ப ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் பிசிஏ 3 ஆண்டு பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும். உத்தரபிரதேச மாநிலம்அமெதி பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் பிசிஏ, பிபிஏ மற்றும்பிகாம் பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும்.

என்ன தகுதி அவசியம்?

இந்த வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சியைப் பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். கடந்த 2020-21 மற்றும் 2021- 22ஆம் ஆண்டு 12-ம் வகுப்பில் கணிதம், வணிக கணிதம் பாடத்தில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இதில் தாட்கோவின் பங்களிப்பாக ஹெச்சிஎல் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க திறன் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோவே ஏற்கும். பின்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1.18 லட்சம் கட்டணத்தை முதல் 6 மாத பயிற்சிக்காலத்தில் தாட்கோ கடனாக வழங்கும்.

பிட்ஸ்-பிலானி பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் மற்றும் சாஸ்த்ரா மற்றும் அமெதி பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்ததும் ஹெச்சிஎல் நிறுவனத்தில் முதல் ஆண்டு திறமைக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வுடன் ஆண்டு ஊதியம் ரூ.1.7 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.


TAHDCO HCL Tie Up: இலவசப் பயிற்சியுடன் ஊக்கத்தொகை; லட்சக்கணக்கில் ஊதியம் - பிளஸ் 2 முடித்தோருக்கு அருமையான வாய்ப்பு

இந்த நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நுழைவுத் திறனுக்கான 3 பாடப்பிரிவு அதாவது தொடர்பு திறன் (அடிப்படை ஆங்கிலம்), ஆராயும் திறன், தர்க்கவியல் திறன் மற்றும் கணிதம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பின் இணைய வழியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வில் 3 பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 10-க்கு 4 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானதாகும்.

கூடுதல் விவரங்களுக்கு தாட்கோவின் www.tahdco.com என்ற இணையதளத்தை காணலாம். 

முன்பதிவுக்கு: http://iei.tahdco.com/register.php

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
Embed widget