மேலும் அறிய

LKG UKG : எல்கேஜி, யூகேஜிக்கு பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களையே நியமிக்கக் கூடாது.. அரசுக்குக் கோரிக்கை

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணியின்‌ மாநில பொதுச்செயலாளர்‌ ச.மயில்‌ வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழகத்தில்‌ தொடக்கக் கல்வித்துறையின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ 2,381 அரசு நடுநிலைப் பள்ளிகளில்‌ செயல்பட்டுவந்த அங்கன்வாடி மையங்களை மூடும்‌ முடிவைத் தமிழக அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌ எனவும்‌, பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களில்‌ முன்பருவ ஆசிரியர்‌ பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்து செயல்படுத்த வேண்டும்‌ எனவும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களைத்‌ தொடங்கிட வேண்டும்‌ எனவும்‌ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில்‌ கடந்த அதிமுக ஆட்சியில்‌ 2018 டிசம்பர்‌ மாதத்தில்‌ 2,381 அரசு நடுநிலைப்பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்கள்‌ தொடங்கப்பட்டன. இம்மையங்களில்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களில்‌ மாணவர்கள்‌ சேர்க்கப்பட்டனர்‌. அரசின்‌ இம்முயற்சி நல்ல வரவேற்பைப்‌ பெற்றது. ஆனால்‌, இதில்‌ அரசு செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களில்‌ கற்பிப்பதற்கு 1 முதல்‌ 5 வகுப்புக்களில்‌
கற்பித்தல்‌ பணியில்‌ இருந்த இடைநிலை ஆசிரியர்களை நியமித்ததுதான்‌. 

ஏனென்றால்‌ கடந்த 8 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தொடக்கக் கல்வித்துறையில்‌ ஆசிரியர்‌ நியமனங்களே செய்யப்படாத நிலையில்‌, ஏற்கனவே 1 முதல்‌ 5 வகுப்பு கற்பிக்கும்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌ பற்றாக்குறையாக உள்ள நிலையில்‌ 2,381 இடைநிலை ஆசிரியர்களைக்‌ கொண்டுபோய்‌ அங்கன்வாடி வகுப்புகளைக்‌ கையாள நியமித்தது 1 முதல்‌ 5 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கான கற்பித்தல்‌ பணியை வெகுவாகப்‌ பாதிக்க வைத்தது. 

தற்போதைய நிலையில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ 5000-க்கும்‌ மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்‌ காலிப்பணியிடங்கள்‌ உள்ள நிலையில்‌, ஏற்கனவே பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடிகளில்‌ நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும்‌ 1 முதல்‌ 5 வகுப்புகளுக்கான கற்பித்தல்‌ பணிக்கு கொண்டுவரப்பட்டது சரியான நடவடிக்கைதான்‌. ஆனால்‌, அதற்காக பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களை மூடாமல்‌ அவற்றில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து தொடர்ந்து நடத்திட வேண்டும்‌.

இன்றைய காலச்சூழலில்‌ பெற்றோர்கள்‌ தங்களது குழந்தைகளை 3 வயதிலேயே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்‌. அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும்‌ அங்கன்வாடி மையங்கள்‌ செயல்பட்டால்‌ அப்பகுதியில்‌ உள்ள பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளை அம்மையங்களில்‌ உள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களுக்கு அனுப்புவர்‌. 


LKG UKG : எல்கேஜி, யூகேஜிக்கு பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களையே நியமிக்கக் கூடாது.. அரசுக்குக் கோரிக்கை

அக்குழந்தைகள்‌ அப்பள்ளிகளிலேயே 1ம்‌ வகுப்பைத்‌ தொடர்ந்து படிப்பதற்கும்‌ வாய்ப்புக்‌ கிடைக்கும்‌ மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள பெற்றோர்கள்‌ பல ஆயிரங்கள்‌ பணம்‌ செலவு செய்து சுயநிதிப்‌ பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்‌ நிலையும்‌ ஏற்படாது. பணம்‌ செலுத்தி தங்கள்‌ குழந்தைகளுக்கு முன்பருவக்‌ கல்வி பெற இயலாத பெற்றோர்களுக்கும்‌ இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்‌.

எனவே, தமிழக அரசு நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ செயல்பட்டுவந்த 2,381 அங்கன்வாடி மையங்களை மூடும்‌ முடிவைக்‌ கைவிட்டு, அவற்றில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமித்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும்‌. அதுமட்டுமல்லாது படிப்படியாக மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும்‌ அங்கன்வாடி மையங்களை உருவாக்கி அவற்றில்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களைத்‌ துவக்கி, அதில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்‌. 

இதனால்‌ அரசு ஆரம்ப, நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை உயரும்‌. அரசுப் பள்ளி மாணவர்களின்‌ கல்வித்தரம்‌ மேம்படும்‌. ஆனால்‌, ஒருபோதும்‌ அங்கன்வாடி மையங்களில்‌ ஏற்கனவே ஆரம்ப வகுப்புக்களில்‌ பணியாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ இடைநிலை ஆசிரியா்களை நியமிக்கக்‌ கூடாது என தமிழக அரசைக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும்‌, தமிழகத்தில்‌ தொடக்கக் கல்வியில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித் தரத்தை மேம்படுத்த உடனடியாக 5000க்கும்‌ மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’. 

இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக்கொள்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget