மேலும் அறிய

LKG UKG : எல்கேஜி, யூகேஜிக்கு பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களையே நியமிக்கக் கூடாது.. அரசுக்குக் கோரிக்கை

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணியின்‌ மாநில பொதுச்செயலாளர்‌ ச.மயில்‌ வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழகத்தில்‌ தொடக்கக் கல்வித்துறையின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ 2,381 அரசு நடுநிலைப் பள்ளிகளில்‌ செயல்பட்டுவந்த அங்கன்வாடி மையங்களை மூடும்‌ முடிவைத் தமிழக அரசு திரும்பப்‌ பெற வேண்டும்‌ எனவும்‌, பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களில்‌ முன்பருவ ஆசிரியர்‌ பயிற்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்து செயல்படுத்த வேண்டும்‌ எனவும்‌, தமிழகம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களைத்‌ தொடங்கிட வேண்டும்‌ எனவும்‌ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில்‌ கடந்த அதிமுக ஆட்சியில்‌ 2018 டிசம்பர்‌ மாதத்தில்‌ 2,381 அரசு நடுநிலைப்பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்கள்‌ தொடங்கப்பட்டன. இம்மையங்களில்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களில்‌ மாணவர்கள்‌ சேர்க்கப்பட்டனர்‌. அரசின்‌ இம்முயற்சி நல்ல வரவேற்பைப்‌ பெற்றது. ஆனால்‌, இதில்‌ அரசு செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களில்‌ கற்பிப்பதற்கு 1 முதல்‌ 5 வகுப்புக்களில்‌
கற்பித்தல்‌ பணியில்‌ இருந்த இடைநிலை ஆசிரியர்களை நியமித்ததுதான்‌. 

ஏனென்றால்‌ கடந்த 8 ஆண்டுகளுக்கும்‌ மேலாக தொடக்கக் கல்வித்துறையில்‌ ஆசிரியர்‌ நியமனங்களே செய்யப்படாத நிலையில்‌, ஏற்கனவே 1 முதல்‌ 5 வகுப்பு கற்பிக்கும்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌ பற்றாக்குறையாக உள்ள நிலையில்‌ 2,381 இடைநிலை ஆசிரியர்களைக்‌ கொண்டுபோய்‌ அங்கன்வாடி வகுப்புகளைக்‌ கையாள நியமித்தது 1 முதல்‌ 5 வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கான கற்பித்தல்‌ பணியை வெகுவாகப்‌ பாதிக்க வைத்தது. 

தற்போதைய நிலையில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ 5000-க்கும்‌ மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்‌ காலிப்பணியிடங்கள்‌ உள்ள நிலையில்‌, ஏற்கனவே பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடிகளில்‌ நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும்‌ 1 முதல்‌ 5 வகுப்புகளுக்கான கற்பித்தல்‌ பணிக்கு கொண்டுவரப்பட்டது சரியான நடவடிக்கைதான்‌. ஆனால்‌, அதற்காக பள்ளிகளுடன்‌ இணைந்த அங்கன்வாடி மையங்களை மூடாமல்‌ அவற்றில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து தொடர்ந்து நடத்திட வேண்டும்‌.

இன்றைய காலச்சூழலில்‌ பெற்றோர்கள்‌ தங்களது குழந்தைகளை 3 வயதிலேயே பள்ளிகளுக்கு அனுப்பி விடுகின்றனர்‌. அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும்‌ அங்கன்வாடி மையங்கள்‌ செயல்பட்டால்‌ அப்பகுதியில்‌ உள்ள பெற்றோர்கள்‌ தங்கள்‌ குழந்தைகளை அம்மையங்களில்‌ உள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களுக்கு அனுப்புவர்‌. 


LKG UKG : எல்கேஜி, யூகேஜிக்கு பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களையே நியமிக்கக் கூடாது.. அரசுக்குக் கோரிக்கை

அக்குழந்தைகள்‌ அப்பள்ளிகளிலேயே 1ம்‌ வகுப்பைத்‌ தொடர்ந்து படிப்பதற்கும்‌ வாய்ப்புக்‌ கிடைக்கும்‌ மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள பெற்றோர்கள்‌ பல ஆயிரங்கள்‌ பணம்‌ செலவு செய்து சுயநிதிப்‌ பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்‌ நிலையும்‌ ஏற்படாது. பணம்‌ செலுத்தி தங்கள்‌ குழந்தைகளுக்கு முன்பருவக்‌ கல்வி பெற இயலாத பெற்றோர்களுக்கும்‌ இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்‌.

எனவே, தமிழக அரசு நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ செயல்பட்டுவந்த 2,381 அங்கன்வாடி மையங்களை மூடும்‌ முடிவைக்‌ கைவிட்டு, அவற்றில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமித்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும்‌. அதுமட்டுமல்லாது படிப்படியாக மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும்‌ அங்கன்வாடி மையங்களை உருவாக்கி அவற்றில்‌ எல்கேஜி, யூகேஜி வகுப்புக்களைத்‌ துவக்கி, அதில்‌ மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்‌. 

இதனால்‌ அரசு ஆரம்ப, நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை உயரும்‌. அரசுப் பள்ளி மாணவர்களின்‌ கல்வித்தரம்‌ மேம்படும்‌. ஆனால்‌, ஒருபோதும்‌ அங்கன்வாடி மையங்களில்‌ ஏற்கனவே ஆரம்ப வகுப்புக்களில்‌ பணியாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ இடைநிலை ஆசிரியா்களை நியமிக்கக்‌ கூடாது என தமிழக அரசைக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும்‌, தமிழகத்தில்‌ தொடக்கக் கல்வியில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வித் தரத்தை மேம்படுத்த உடனடியாக 5000க்கும்‌ மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’. 

இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக்கொள்கிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Embed widget