மேலும் அறிய

Engum Tamil Ethilum Tamil: எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் திட்டத்தை அமல்படுத்துக: அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Engum Tamil Ethilum Tamil Scheme: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமல்படுத்தப்பட்ட அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமல்படுத்தப்பட்ட அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அலுவலர்கள் தமிழிலேயே கட்டாயம் கையொப்பமிட வேண்டும். அரசு தலைமைச் செயலக துறைகள் ஆங்கிலத்தில் ஆணைகள் வெளியிடும் நேர்வுகளில் இனி ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ்‌ ஆட்சிமொழிச்‌ சட்டம்‌ 1956-ல்‌ இயற்றப்பட்டு, தமிழ்நாட்டின்‌ ஆட்சி மொழியாக தமிழ்‌ மொழி இருந்து வருகிறது. எங்கும்‌ தமிழ்‌ எதிலும்‌ தமிழ்‌ என்ற உயரிய இலக்கை அடிப்படையாகக்‌ கொண்டு, தமிழ்‌ ஆட்சிமொழி மற்றும்‌ தமிழ்‌ வளர்ச்சி தொடர்புடைய திட்டங்களை மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அரசு
அலுவலகம்‌, தன்னாட்சி நிறுவனங்கள்‌, வாரியங்களில்‌ பணியாற்றும் அரசு அலுவலர்கள்‌ செம்மையுற செயற்படுத்தவும்‌ மற்றும்‌ அவர்களின்‌ பயன்பாட்டிற்கும்‌, மேலும்‌ பொதுமக்கள்,‌ மாணவர்கள்‌ மற்றும்‌ தனியார்‌ அமைப்புகள்‌ பயன்படுத்த ஏதுவாக பல்வேறு துறைகள்‌ வாயிலாக அரசாணைகள்‌, கடிதங்கள்‌ மற்றும்‌ குறிப்புரைகள்‌, அறிவுரைகள்‌ வாயிலாகத்‌ தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்புப் பரிசுகள்

ஆட்சிமொழித்‌ திட்டப்‌ பயிற்சிகள்‌, கருத்தரங்குகள்‌, ஆய்வுகள்‌, ஆட்சிசொல்‌ அகராதி உருவாக்கும்‌ தொடர்பணிகள்‌ முதலியன தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை, செந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ அகரமுதலித்‌ திட்ட இயக்ககம்‌ வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சிமொழித்‌ திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும்‌ மாவட்ட அலுவலகங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கும்‌ பரிசுகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, கலைச்சொல்‌ உருவாக்குதல்‌, இலக்கியத்‌ திறன்‌ போட்டிகள்‌, மாணவர்களுக்கான அகராதியியல்‌ விழிப்புணர்வுத்‌ திட்டம்‌, சொற்குவை, மாணவர்‌ தூதுவர்‌ பயிற்சித்‌ திட்டம்‌ மற்றும்‌ திருக்குறள்‌ முற்றோதல்‌ முதலிய திட்டங்கள்‌ தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ அகர முதலி திட்ட இயக்ககம்‌ வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அயல்‌ மாநிலங்கள்‌ மற்றும்‌ உலகளவில்‌ தமிழ்மொழியை பரப்பும்‌ வகையில், தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில்‌, தெரிவு செய்யப்பட்ட பிறமாநில பல்கலைக்கழகங்களில்‌ தமிழில்‌ பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு ஊக்கத்‌ தொகை மற்றும்‌ பேராசிரியர்‌ நியமனங்களுக்கு அரசின்‌ சார்பாக ஊதியம்‌ வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல்‌, பிறநாடுகளில்‌ உள்ள பல்கலைக்கழகங்களில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ தமிழ்‌ ஆர்வலர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, தமிழ்‌ இருக்கைகள்‌ அமைக்க அரசின்‌ நல்கைத்‌ தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழிலேயே கட்டாயம் கையொப்பம்

அந்த வகையில், எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமல்படுத்தப்பட்ட அரசாணையைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதில் பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுடன், அவை பற்றிய குறிப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். தமிழிலேயே கட்டாயம் கையொப்பமிட வேண்டும். அரசு தலைமைச் செயலக துறைகள் ஆங்கிலத்தில் ஆணைகள் வெளியிடும் நேர்வுகளில் இனி ஆங்கிலத்துடன் தமிழிலும் வெளியிடப்பெற வேண்டும். அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தங்களின் பெயரின் முதல் எழுத்தை எழுதும்போது ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தாமல், சரியான தமிழ் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

முழு விவரத்தைக் காண:

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget