மேலும் அறிய

PM Modi Speech: புதியதோர் உலகம் செய்வோம்: பாரதிதாசன் பல்கலை.யில் தமிழில் அட்டகாசமாகப் பேசி அசத்திய பிரதமர் மோடி!

Bharathidasan University Convocation 2024: மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.

வணக்கம் எனது மாணவ குடும்பமே என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டமளிப்பு உரையைத் தொடங்கிப் பேசினார் பிரதமர் மோடி.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

’’வணக்கம் எனது மாணவ குடும்பமே… மிக அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024ஆம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமைகொள்கிறேன். பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. 

புதியதோர் உலகம் செய்வோம் என்றார் பாரதிதாசன். நாம் கற்ற கல்வியும் அறிவியலும் வேளாண்மையை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு உதவ வேண்டும்’’. 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, ’’எனது மாணவ குடும்பமே..’’ என்று பேச்சினூடே 9 முறை தமிழில் பிரதமர் மோடி பேசியது கவனத்தை ஈர்த்தது. 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’திராவிடக் கொள்கைகளை தமிழகத்தில் முழங்கிய பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்தப் பட்டியல் எடுத்தாலும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு அதில் இடம் இருக்கும். மாணவர்களுக்கு அனைவருக்கும் பள்ளிக் கல்வி, கல்லூரி, ஆராய்ச்சிக் கல்வியை வழங்குகிறது நம் திராவிட மாடல் அரசு. பல்கலைக்கழகங்கள் சமூக நீதியையும் புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும்.

 தமிழ்நாட்டு மாணவர்களை - படிப்பிலும்‌, வாழ்க்கையிலும்‌ வெற்றியாளராக்குவதற்கு "நான்‌ முதல்வன்‌" திட்டம்‌ உருவாக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மாணவர்களின்‌ சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, "CM Research Grant Scheme", உயர்கல்வி மாணவர்களின்‌ சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும்‌ வகையில்‌, "CM Fellowship Program" ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்படுகிறது.

*  பெண் கல்வியை ஊக்குவிக்கும்‌ பொருட்டு "மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌" எனும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அரசுப்‌ பள்ளியில்‌ படித்து, கல்லூரிக்குள்‌ நுழையும்‌ 3 லட்சத்து 45 ஆயிரத்து 362 மாணவியருக்கு மாதம்‌ தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்படுகிறது.

* தமிழ்நாடு மாணவர்கள்‌ போட்டித்‌ தேர்வுகள்‌, ஆட்சிப்‌ பணித்‌ தேர்வுகள்‌, திறன்சார்ந்த தேர்வுகளுக்கு தயார்‌ செய்யும்பொருட்டு மதுரையில்‌ கலைஞர்‌ நூற்றாண்டு நினைவு நூலகம்‌ அமைக்கப்பட்டிருக்கிறது’’என்று கூறி இருந்தார். 

தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சென்றனர். 

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
CA Final Result: ஐயோ இதிலுமா… சிஏ இறுதித் தேர்வு தரவுகள் இணையத்தில் கசிவு? மாணவர்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
"10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
TN Assembly: 5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
Embed widget