மேலும் அறிய

NEET, JEE Special Coaching: நீட், ஜேஇஇ சிறப்புப் பயிற்சி: 1.07 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்பதிவு

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க மொத்தம் 1.07 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க மொத்தம் 1.07 லட்சம் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நீட் தேர்வுக்கு 46,216 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல ஜேஇஇ (JEE) தேர்வுக்கு 29,279 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். 

அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த வகையிலும் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காக, பள்ளிகளில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது

முன்னதாக இதற்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு அரசுப்பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதேநேரத்தில் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொழிற்கல்வி இணை இயக்குநர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தார். அதில், முன்கூட்டியே திட்டமிட்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளில் வட்டார அளவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 1.30 மணி நேரம், குறிப்பாக 4 முதல் 5.30 மணி வரை பாடவாரியாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அதேநேரத்தில் பயிற்சி வகுப்பில் சேர மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வார நாட்களில் பயிற்சி 

பள்ளிகளிலேயே இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், வார நாட்களில் கீழ்க்காணும் அட்டவணையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நீட் / ஜேஇஇ போன்ற நுழைவுத்‌ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின்‌ அடிப்படையில்‌ பள்ளிக் கல்வி இயக்ககத்தால்‌ வழங்கப்படும்‌ கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள்‌ வழங்கப்பட வேண்டும்  என்று பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தெரிவித்து இருந்தார்.

திங்கள்  - தாவரவியல் / கணிதம்
செவ்வாய்‌ -  இயற்பியல்‌
புதன் - விலங்கியல்‌ / கணிதம்
வியாழன்‌ -  வேதியியல்‌ 
வெள்ளி - மீள்பார்வை / சிறு தேர்வு

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு 46,216 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல ஜேஇஇ (JEE) தேர்வுக்கு 29,279 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 1,07,225 பேர் தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பித்து , படித்து வருகின்றனர். இரண்டு தேர்வுகளையும் எழுத, 31,730 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக அமைச்சர்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

குழந்தைகள் தின விழா இன்று (நவம்பர் 14) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!
மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!
கனவாகுமா? நனவாகுமா: கும்பகோணம் மக்கள் எதிர்பார்ப்பு எதற்காக?
கனவாகுமா? நனவாகுமா: கும்பகோணம் மக்கள் எதிர்பார்ப்பு எதற்காக?
Embed widget