மேலும் அறிய

NEET Bill: 21 மாதங்களாக நிலுவையில் இருக்கும் நீட் மசோதா; மீண்டும் குடியரசுத்தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் 

நீட் மசோதா குறித்து குடியரசு தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், காணாமல் போவது கடிதமல்ல நிர்வாக நேர்மை என்று எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

நீட் மசோதா குறித்து குடியரசு தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், காணாமல் போவது கடிதமல்ல நிர்வாக நேர்மை என்று எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

மர்த்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க., .அ.தி.மு.க. ஆகிய பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நீட் விலக்கு மசோதா

கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதில் தந்த குடியரசுத் தலைவர் தரப்பு நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தனர்.

கடிதம் வரவில்லை

இதையடுத்து, குடியரசுத் தலைவரின் பதிலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தில் எம்.பி.யின் கடிதம் என்ன நிலையில் இருக்கிறது? என்பது குறித்து தெரிந்த கொள்வதற்காகக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரால் அனுப்பிய கடிதத்தை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், நீட் மசோதா குறித்து குடியரசு தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், காணாமல் போவது கடிதமல்ல நிர்வாக நேர்மை என்று எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் தெரிவித்து உள்ளதாவது:

’’தமிழ்நாடு  மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து, நான் குடியரசுத் தலைவருக்கு 19.01.2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் மசோதாவுக்கு, 15 மாதங்களாக  ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழக பெற்றோர்கள், மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். 

இதற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. அதில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI reply) அதிர்ச்சி அளிக்கிறது. 

"24.12.2022 தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று வெங்கடேசன் அளித்த கடிதம், தங்களின் கடிதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல எங்களுக்கு அது வரப் பெறவில்லை." என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

மேல் நடவடிக்கைக்கு அனுப்பிவைப்பு

இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத் தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக சொல்கிறது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது.

தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சினையில், மத்திய அரசு சார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதா

இன்று குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவன செய்யுமாறு வேண்டியுள்ளேன்’’.

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
TN 12th Result 2026: தாமதமாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; எப்போது வெளியீடு? என்ன காரணம்?
TN 12th Result 2026: தாமதமாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; எப்போது வெளியீடு? என்ன காரணம்?
உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
"முதல் கையெழுத்தே எங்கள் வாழ்வாதாரமாக இருக்கட்டும்" - முதலமைச்சராகும் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு உருக்கமான வேண்டுகோள்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK ADMK Alliance: இது லிஸ்ட்லயே இல்லயே! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா? என்ன நடக்கிறது?
DMK ADMK Alliance: இது லிஸ்ட்லயே இல்லயே! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா? என்ன நடக்கிறது?
Vijay Swearing-In: விஜய் பதவியேற்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? அடுத்தடுத்து சிக்கல்
Vijay Swearing-In: விஜய் பதவியேற்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? அடுத்தடுத்து சிக்கல்
தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது - கே.பி.முனுசாமி அதிரடி அறிவிப்பு
தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது - கே.பி.முனுசாமி அதிரடி அறிவிப்பு
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
PM Shri Scheme: அதுக்குள்ளயா? பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கடிதம்
TVK Minister: தவெக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை யாருக்கு? காமாட்சியை டிக் செய்யப்போகும் விஜய்?
TVK Minister: தவெக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை யாருக்கு? காமாட்சியை டிக் செய்யப்போகும் விஜய்?
Kanimozhi: முதலமைச்சராகும் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து - என்ன சொன்னார் தெரியுமா?
முதலமைச்சராகும் விஜய்க்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து - என்ன சொன்னார் தெரியுமா?
TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
TVK Promises: முதல்வராகும் விஜய்; தவெக தேர்தல் அறிக்கையில் என்னென்ன தள்ளுபடி, இலவசம், உதவித்தொகை, மானியங்கள்?
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Embed widget