![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CUET UG 2023: க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த 16.85 லட்சம் பேர்; முதலிடத்தில் உ.பி.!
க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு 16.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். உ.பி.யில் இருந்து அதிகம்பேர் விண்ணப்பித்துள்ளனர்.
![CUET UG 2023: க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த 16.85 லட்சம் பேர்; முதலிடத்தில் உ.பி.! Nearly 14 lakh applications received for second edition CUET-UG up 41 percent from last year: UGC Chairman CUET UG 2023: க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு விண்ணப்பித்த 16.85 லட்சம் பேர்; முதலிடத்தில் உ.பி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/10/a1fd1764c36bf538e8666e51b77fecb11676028203096522_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு 16.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். உ.பி.யில் இருந்து அதிகம்பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனினும் முதுநிலை படிப்புகளில் சேரத் தேர்வு கட்டாயம் ஆக்கப்படவில்லை.
என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது. இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கப்பட்டது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12ஆம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி தேர்வர்கள் மார்ச் 31 வரை விண்ணப்பித்தனர். ஏப்ரல் 1 முதல் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்களைத் திருத்த அவகாசம் வழங்கப்பட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு 16.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ல் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் உ.பி.யில் இருந்து அதிகம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெல்லி மற்றும் பிஹாரில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2023-ல் க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு 16.85 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 13.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு 12.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 9.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் 2023ஆம் ஆண்டில் 41 சதவீதம் பேர் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 3ஆம் வாரத்தில் தேர்வு முடிவுகள்
இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும் வெளியிட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)