மேலும் அறிய

பள்ளி மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை வளர்க்க LEVEL UP திட்டம்: மாதாந்திர இலக்கு வெளியீடு!

ஆறு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரையிலான மாணவர்களின்‌, ஆங்கில மொழியில்‌ வாசித்தல்‌, பேசுதல் மற்றும்‌ எழுதுதல்‌ ஆகிய அடிப்படைத்‌ திறன்களை முறையாக மேம்படுத்த LEVEL UP என்ற திட்டம் அறிமுகம்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ அடிப்படை ஆங்கில மொழித்‌ திறன்களை மேம்படுத்தும்‌ LEVEL UP திட்டத்தின்‌ கீழ்‌ மாத வாரியான மொழித்திறன்‌ இலக்குகள்‌ தொடர்பாகவும் ஜூலை மாதத்திற்கான திறன்‌ வளர்‌ செயல்பாடுகள்‌ அட்டவணை வெளியிடுதல்‌ பற்றியும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

அது என்ன LEVEL UP திட்டம்?

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அரசுப்‌ பள்ளிகளில்‌, ஆறு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரையிலான மாணவர்களின்‌, ஆங்கில மொழியில்‌ வாசித்தல்‌, பேசுதல் மற்றும்‌ எழுதுதல்‌ ஆகிய அடிப்படைத்‌ திறன்களை முறையாக மேம்படுத்துவதற்கான LEVEL UP என்ற தன்னார்வத்‌ திட்டத்தினை அறிமுகம் செய்து, தொடர்‌ செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இத்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக, மாணவர்களின்‌ அடிப்படை மொழித்திறன்கள்‌ மேம்படுவதற்கான மாதவாரியான இலக்குகள்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌ முறையாக நிர்ணயிக்கப்பட்டு, அவை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளன.

அவ்வகையில்‌, ஜூன்‌ மாதத்திற்கான மொழித்திறன்‌ இலக்குகள்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌ கொண்ட அட்டவணை வெளியிடப்பட்டு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இச்செயல்பாடுகள்‌ மற்றும்‌ இலக்குகளின் அடைவை உறுதிபடுத்தும்‌ வகையில்‌ உரிய கால இடைவெளிகளில்‌ பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும்.

இந்நிலையில்‌, ஜூன்‌ மாதத்தின்‌ செயல்பாடுகளைத்‌ தொடர்ந்து ஜூலை மாதத்தின்‌ நான்கு வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழித்‌ திறன்வளர்‌ இலக்குகள்‌ மற்றும்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ தற்போது வெளியிடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் மொழித்திறன் இலக்கு

2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌, அரசுப்பள்ளி மாணவர்கள்‌ ஜூன்‌ 2025 முதல்‌ டிசம்பர்‌ 2025 வரையுள்ள ஏழு மாதங்களில்‌ ஆங்கில மொழியின்‌ நான்கு அடிப்படைத்‌ திறன்களை எளிதாக அடையும்‌ வகையில்‌ பல்வேறு செயல்பாடுகள்‌ இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும்‌ அதன்‌ மூன்றாம்‌ அல்லது நான்காம்‌ வாரத்தில்‌ அடுத்து வரும்‌ மாதத்திற்கான மொழித்திறன்‌ இலக்குகள்‌ கொண்ட அட்டவணை வெளியிடப்படும்.

மாணவர்களின்‌ அடிப்படைத்‌ திறன்களின்‌ முன்னேற்றத்தை குறிக்கோளாகக்‌ கொண்டு, அனைத்து மாணவர்களும்‌ செயல்பாடுகளில்‌ பங்கு பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்படுகிறது.

ஜூன்‌ மாத மொழிவளர்‌ திறன்‌ அட்டவணை உரிய முறையில்‌ மேற்கொள்ளப்பட்டு அதன்‌ இலக்குகள்‌ அடையப்‌ படுவதை உறுதி செய்வதோடு, முழுமையான அடிப்படை மொழித்திறன்‌ அடைவிற்காக குறிப்பாக ஆறு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரையிலான மாணவர்கள்‌ மேற்கொள்ளக்‌ கூடிய மற்ற கற்றல்‌ செயற்பாடுகளுடன்‌ இணைந்து, பள்ளிக்கல்வித்‌ துறையால்‌ ஒவ்வொரு மாதமும்‌ வெளியிடப்படும்‌ அட்டவணைக்கேற்ப அடிப்படை ஆங்கில மொழி வளர்‌ செயல்பாடுகளை ஆங்கில மொழி கற்பிக்கும்‌ ஆசிரியர்கள்‌ மேற்கொள்வதை ஊக்குவித்து, அனைத்து மாணவர்களும்‌ அடிப்படை மொழித்‌ திறன்களை பெற உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

உரிய கால இடைவெளிகளில்‌ மீளாய்வு

மேலும்‌, இத்திட்டம்‌ சார்ந்து ஆசிரியர்களின்‌ கற்பித்தல்‌ நுட்பங்கள்‌ மற்றும்‌ மொழித்‌ திறன்‌ வளங்களைக்‌ கொண்ட வலைத்தளம்‌ https://sites.google.com/view/tnlevelup ஆசிரியர்களின்‌ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு ஒவ்வொரு மாதத்திற்கும்‌ நான்கு வாரங்களுக்கான மொழித்திறன்‌ இலக்குகள்‌ அவ்வலைப் பக்கத்தில்‌ பதிவிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்‌ செயல்பாடுகள்‌ மூலம்‌ மாணவர்கள்‌ பெற்ற அடிப்படை ஆங்கில மொழித்‌ திறன்‌ அடைவு குறித்து உரிய கால இடைவெளிகளில்‌ மீளாய்வுகள் மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
தொற்று நோய், வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்.. பாராட்டைப் பெற்ற மீனாட்சி பல்கலைக்கழகம்!
தொற்று நோய், வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்.. பாராட்டைப் பெற்ற மீனாட்சி பல்கலைக்கழகம்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
”போரை இந்தியா விரும்பவில்லை” ABP நெட்வொர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் அதிதேப் சர்கார் பேச்சு
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்: ஓபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்! வேற என்ன சொன்னார்?
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்: ஓபிஎஸ்ஸை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்! வேற என்ன சொன்னார்?
OPS: ''அண்ணாவைப் போல தளபதி ஸ்டாலின்; திமுகவில் இணைந்தது ஏன்?''- ஓபிஎஸ் பரபர விளக்கம்
OPS: ''அண்ணாவைப் போல தளபதி ஸ்டாலின்; திமுகவில் இணைந்தது ஏன்?''- ஓபிஎஸ் பரபர விளக்கம்
OPS JOIN DMK: ஸ்டாலினோடு கை கோர்த்த ஓபிஎஸ்.! திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்
ஸ்டாலினோடு கை கோர்த்த ஓபிஎஸ்.! திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்
OPS Join Dmk : மெகா ட்விஸ்ட்.! கை விட்ட பாஜக, அதிமுக... வேறு வழியில்லாமல் திமுகவில் தஞ்சம் அடையும் ஓபிஎஸ்.?
மெகா ட்விஸ்ட்.! கை விட்ட பாஜக, அதிமுக... வேறு வழியில்லாமல் திமுகவில் தஞ்சம் அடையும் ஓபிஎஸ்.?
O Panneer Selvam: ‘கூச்சமே இல்லையா?.. அம்மா எல்லாம் சும்மாவா?’ - திமுகவில் ஓபிஎஸ்.. விளாசிய அதிமுக!
O Panneer Selvam: ‘கூச்சமே இல்லையா?.. அம்மா எல்லாம் சும்மாவா?’ - திமுகவில் ஓபிஎஸ்.. விளாசிய அதிமுக!
Top 10 News Headlines: தேர்தலில் போட்டி? - ஓபிஎஸ், தெலங்கானா அரசு தாராளம், இந்தியா-இஸ்ரேல் 17 ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
தேர்தலில் போட்டி? - ஓபிஎஸ், தெலங்கானா அரசு தாராளம், இந்தியா-இஸ்ரேல் 17 ஒப்பந்தங்கள் - 11 மணி செய்திகள்
Embed widget