மேலும் அறிய

Competency Test: மாணவர்களுக்கு மாதாமாதம் மதிப்பீட்டுத் தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..முழு விவரம் 

தமிழ்நாட்டின் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ள மாதம் ஒருமுறை கற்றல்‌ விளைவு / திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்ள மாதம் ஒருமுறை கற்றல்‌ விளைவு / திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தமிழ்நாடு அரசின்‌ முன்னோடித்‌ திட்டங்களில்‌ ஒன்றான “மாநில மதிப்பீட்டுப் புலம்‌” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகளை நடத்துதல்‌ தொடர்பாக பின்வரும்‌ வழிகாட்டுதல்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.

1. தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ 29.08.2023 முதல்‌ 01.09.2023 வரை படிப்படியாக 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்த வேண்டும்‌.

2. இந்த மதிப்பீட்டுத்‌ தேர்வுகளுக்கான வினாத்தாள்கள்‌ அனைத்தும்‌ மாநில மதிப்பீட்டுப்‌ புலம்‌ வழியாக https://exam.tnschools.gov.in என்னும்‌ இணையதளத்தில்‌ முன்கூட்டியே பதிவேற்றம்‌ செய்யப்படும்‌.

3. தேர்வு நடைபெறும்‌ நாளுக்கு ஒரு நாள்‌ முன்பாக பிற்பகல்‌ 2 மணி முதல்‌ அடுத்த 23 மணி நேரத்துக்குள்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கம்‌ செய்திருக்க வேண்டும்‌.

4. வினாத்தாள்களைப்‌ பதிவிறக்கும்போது ஏற்படும்‌ சிக்கல்களுக்குத்‌ தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத்‌ தொலைபேசி‌ சேவையைப்‌ பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்‌.

5. தேர்வு தொடங்கும்‌ நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித்துறையின்‌ சார்பில்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளுக்கும்‌ வழங்கப்பட்டுள்ள அச்சுப் பொறியைப்‌ பயன்படுத்தி மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள்‌ அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்‌.

6. ஒவ்வொரு கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வும்‌ (Learning Outcome / Competency Based Test)  40 மணித்துளிகளில்‌ நிறைவு செய்யத்தக்க வகையில்‌ 25 கொள்குறி வகை வினாக்களைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொரு வினாவும்‌ ஒரு மதிப்பெண்ணைக்‌ கொண்டிருக்கும்‌. ஒவ்வொரு மாணவருக்கும்‌ தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அத்தாள்களிலேயே மாணவர்களைக்‌ குறிப்பிடச்‌ செய்ய வேண்டும்‌. இத்தேர்வை வகுப்பாசிரியர்‌ அவரது பாடவேளையில்‌ தவறாமல்‌ நடத்த வேண்டும்‌.

7. இத்தேர்வுக்கான வினாக்கள்‌ அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம்‌, அறிவியல்‌, சமூக அறிவியல்‌ ஆகிய பாடங்களுக்காக அந்நாள் வரை வகுப்பறையில்‌ கற்பிக்கப்பட்ட கற்றல்‌ விளைவுகளின்‌ அடிப்படையில்‌ அமைந்திருக்கும்‌.

8. எவ்விதக்‌ குறுக்கீடும்‌ இன்றி மாணவர்கள்‌ தாங்களாகவே விடைத் தெரிவுகளை மேற்கொள்வதைத்‌ தலைமையாசிரியர்களும்‌ வகுப்பாசிரியர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

9. மாணவர்கள்‌ விடையளித்த வினாத்தாள்களை மீண்டும்‌ பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பாசிரியர்கள்‌ பராமரிக்க வேண்டும்‌.

10. தேர்வுக்குப்‌ பின்‌ வரும்‌ கற்பித்தல்‌ நாட்களில்‌, இவ்வினாத்தாள்களில்‌ இடம்பெற்றிருக்கும்‌ வினாக்கள்‌, வினா அமைப்பு, தேர்வுகளில்‌ இவ்வகை வினாவை எதிர்கொள்ளும்‌ முறை குறித்து தாங்கள்‌ கற்பிக்கும்‌ பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும்‌ தங்கள்‌ வகுப்பறையில்‌ மாணவர்களுடன்‌ தொடர்ச்சியாகக்‌ கலந்துரையாட வேண்டும்‌.

11. ஒவ்வொரு மாதமும்‌ ஒரு முறை என 6 முதல்‌ 9 வகுப்பு வரை அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ கற்றல்‌ விளைவு / திறன்‌ வழி மதிப்பீட்டுத்‌ தேர்வுகள்‌ (Learning Outcome / Competency Based Test) நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

இவ்வாறு மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி ஆகியவற்றின்மாநிலத்‌ திட்ட‌ இயக்குநர்‌கள்,  அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சிவகங்கை வேலை வாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று வேலை, பயிற்சி, உதவித்தொகை பெற அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலை வாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று வேலை, பயிற்சி, உதவித்தொகை பெற அரிய வாய்ப்பு!
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று முன்னணி நிறுவனங்களில் அரிய வேலை வாய்ப்பு!
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 19 அன்று முன்னணி நிறுவனங்களில் அரிய வேலை வாய்ப்பு!
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?
Breakfast Scheme: இனி 8ஆம் வகுப்பு வரை காலை உணவு; முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்பு- எப்போது முதல்?

வீடியோ

Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
Power Cut Reason : ”2024, 25ல் கூட இதே நிலைமை தான்..”நள்ளிரவில் தொடரும் மின் தடை! போட்டுடைத்த CITU
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
Crop Loan Waiver: மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
இலவச பட்டா வாங்க சூப்பர் சான்ஸ்.! காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்- தேதி அறிவித்த அரசு
பட்டா வாங்க சூப்பர் சான்ஸ்.! காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட்- தேதி அறிவித்த அரசு
Honda SUV Facelift: ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் எஸ்யுவி கிங்கை அடிக்குமா?
ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் SUV கிங்கை அடிக்குமா?
Tamilnadu Round Up: MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
MLA-க்களுக்கு பயிற்சி வகுப்பு, குறைந்த தங்கம் விலை, மீனவர்கள் மகிழ்ச்சி - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget