மேலும் அறிய

Ennum Ezhuthum Scheme: எண்ணும் எழுத்தும் திட்டம்; கல்லூரி மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு- வலுக்கும் எதிர்ப்பு

எண்ணும் எழுத்தும் திட்டத்தை, கல்வியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு 3ஆம் நபர் மதிப்பீடு செய்யும் திட்டத்துக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. 

எண்ணும் எழுத்தும் திட்டத்தை, கல்வியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு 3ஆம் நபர் மதிப்பீடு செய்யும் திட்டத்துக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர்  (எஸ்சிஇஆர்டி), உயர் கல்வித்துறை இயக்குனருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா பெருந்தொற்றினால்‌ மாநில அளவில்‌ ஏற்பட்ட கற்றல்‌ இடைவெளியை சரிசெய்ய, 2022 - 2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி 2025 ஆம்‌ கல்வி ஆண்டிற்குள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 8 வயதிற்குட்‌பட்‌ட அனைத்து குழந்தைகளும்‌ எண்ணறிவு மற்றும்‌ எழுத்தறிவு பெற வேண்டும்‌ என்பது இலக்காக நிர்ணயிக்கப் பட்‌டுள்ளது.

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டமானது 2022 - 2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 3 ஆம்‌ வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப் பட்டது. 2023 - 2024 ஆம்‌ கல்வியாண்டில் இருந்து 4 மற்றும்‌ 5 ஆம்‌ வகுப்பிற்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களைக் கொண்டு தர மதிப்பீடு

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ அனைத்துப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 1 முதல்‌ 3 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் நபர்‌ மதிப்பீடு (Third ‌ Party evaluation) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்‌, இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார்‌ கல்வியியல்‌ (பி.எட்.) கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. இதனால்‌ அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள கல்வியியல்‌ கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களை Third ‌ Party evaluation பணியில்‌ மதிப்பீட்டாளராக (Enumerators) செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.

மேலும்‌. இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனங்களில்‌ இன்று (28.08.2023) முதல்‌ 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது.

செப்டம்பரில் கள ஆய்வுப் பணி

பள்ளிகளில்‌ கள ஆய்வுப் பணியானது 04.09.2023 முதல்‌ 15.09.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மேற்காண்‌ தேதிகளில்‌ அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ தனியார்‌ கல்வியியல்‌ (பி.எட்.) கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவர்களை உரிய மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்கள்‌ கோரும்‌ தேவையான எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ உரிய நாட்களில்‌ பணியில்‌ இருந்து விடுவிக்க வேண்டும். விடுவித்து, இப்பணியில்‌ பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர்  (எஸ்சிஇஆர்டி) தெரிவித்து உள்ளார்.

எனினும் இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மூன்றாவது நபர் மதிப்பீடு (Third party evaluation)  செய்யும் முறையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் தனிக்கவனம் மேற்கொண்டு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
CBSE: 'நீதித்துறையில் ஊழல்'- சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு தடை: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
தொற்று நோய், வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்.. பாராட்டைப் பெற்ற மீனாட்சி பல்கலைக்கழகம்!
தொற்று நோய், வைரஸ் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்.. பாராட்டைப் பெற்ற மீனாட்சி பல்கலைக்கழகம்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: தேர்தல் வெற்றிக்குப் பின் ஆட்சியில் பங்கு.. அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ரெடியான பாஜக!
Nainar Nagendran: தேர்தல் வெற்றிக்குப் பின் ஆட்சியில் பங்கு.. அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ரெடியான பாஜக!
தவெகவில் மரியாதை இல்லையா? .. எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு செங்கோட்டையன் பதிலடி!
தவெகவில் மரியாதை இல்லையா? .. எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு செங்கோட்டையன் பதிலடி!
PAK AFG Clash: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தானுக்கு என்ன பிரச்னை? துரந்த் லைனால் வெடிக்கும் போர்? 2,611KM சிக்கல்
PAK AFG Clash: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தானுக்கு என்ன பிரச்னை? துரந்த் லைனால் வெடிக்கும் போர்? 2,611KM சிக்கல்
PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?
PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
IND Vs WI: ”உன் வாழ்க்கை உன் கையில்” ஜெயிச்சா போதும் - மே.தீவுகளை சமாளிக்குமா இந்தியா? அரையிறுதி வாய்ப்பு
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
Ind vs Zim: கதம் கதம்... சேப்பாக்கில் ஜிம்பாப்வேயை ஊதி தள்ளிய இந்தியா! வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாக் அவுட்டுக்கு ரெடி
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
EPS Slams DMK Govt.: என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
Embed widget