மேலும் அறிய

தென்காசியில் கல்விக்கடன் பெற சிறப்பு முகாம்கள் ஏற்பாடு..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் மாணவர்களே..!

”தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் விண்ணப்பங்கள் பெற்று தகுதியான மாணவ - மாணவியருக்கு கல்விக்கடன் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது”

எப்போது? எங்கு? கல்விக்கடன் முகாம்கள்:

மாணவ - மாணவியர் உயர் கல்வி பயில்வதற்கு கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் பலர் பயனடைந்தனர். அதேபோல் இந்த கல்வியாண்டிலும் மாவட்ட நிர்வாகம், தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது.

* வருகிற 28-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி, செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ - மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம்.

* வருகிற 29-ம் தேதி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கடையம் வட்டார மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். 30-ம் தேதி கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம்.

* செப்டம்பர் 3-ம் தேதி கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் நடைபெறும் முகாமில் ஆலங்குளம், கீழப்பாவூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம்.

* செப்டம்பர் 4-ம் தேதி சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம்.

யார் யார் கலந்து கொள்ளலாம்??

அனைத்து கலை, பொறியியல், பட்டய பொறியியல், மருத்துவம் (பொது, பல், கால்நடை மருத்துவம்), விவசாயம், செவிலியர், சட்டம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்புக்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள், மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் மற்றும் வெளி நாடுகளில் தற்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவ - மாணவியரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பல்வேறு கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவ - மாணவியரும் கல்விக்கடன் தேவை எனில் படித்து முடித்த கடந்த கல்வி ஆண்டுக்கான மதிப்பெண் சான்றுடன் வந்து இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

கல்விக்கடன் இலக்கை அடைவது எப்படி?

வங்கிகளில் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி பத்திரம் தேவை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை பிணை தேவையில்லை. ஆனால், மூன்றாம் நபர் உத்தரவாதம் அவசியம். மேலும், நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் (மேனேஜ்மென்ட் கோட்டா, கல்லூரி கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாதவர்கள்) சேரும் அனைத்து மாணவ - மாணவியருக்கு கட்டாயம் சொத்து பிணை அவசியம். தென்காசி மாவட்ட அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் தங்கள் கிளைகளில் பரிசீலனையில் உள்ள கல்விக்கடன் விண்ணப்பத்தையும் மற்றும் கல்விக்கடன் முகாமில் பெறப்படும் கல்விக்கடன் விண்ணப்பத்தையும் பரிசீலனை செய்து மாவட்ட கல்விக்கடன் இலக்கை அடையலாம். மேலும், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ - மாணவியர் அனைவரும் www.vidyalakshmi.co.in மற்றும் www.jansamarth.in என்ற இணையதளங்களில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கல்விக்கடன் முகாம் நடைபெறும் தினத்தில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம்.

இணையத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவர் என்ன செய்வது?

இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவ - மாணவியருக்கு அனைத்து கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் இணையதளத்தில் பதிவுசெய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக இ-சேவை மையமும் அமைக்கப்பட்டு மாணவ - மாணவியருக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யப்படும். இந்த முகாமில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டு கல்விக் கடன் விண்ணப்பங்கள் பெற்று தகுதியான மாணவ - மாணவியருக்கு கல்விக்கடன் வழங்க, தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் அனைத்து கல்லூரி சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள முன்னோடி வங்கி மேலாளரை கல்லூரி நோடல் பேராசிரியர்களை தொடர்புகொள்ளலாம்.

 முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டியவை:

கல்விக்கடனுக்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -3, பான்கார்டு நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல்கள், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று நகல், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிட சான்று நகல், கல்லூரி கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட (கவுன்சலிங் சான்று) சேர்க்கைக்கான ஆவண நகல், கல்லூரி சேர்க்கை கடித நகல், கல்லூரி கட்டண விவரங்களுக்கான சான்று நகல் மற்றும் கல்விக் கடன் பெறும் வங்கியின் பெயர், கணக்கு எண், பாஸ்புக் நகலுடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து பயன் பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை.. கபட நாடகத்தின் உச்சம்.. மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை.. கபட நாடகத்தின் உச்சம்.. மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் எப்போது? வெளியான முக்கியத் தகவல்- பதிவிறக்கம் செய்வது எப்படி?
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
VIT Entrance Exam: விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் - ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
GOLD SILVER RATE Apr. 4th: போச்சுடா.! மறுபடியும் ஏறுமுகத்துக்கு போய்ட்டியா.? தங்கம் விலை இன்றும் உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
போச்சுடா.! மறுபடியும் ஏறுமுகத்துக்கு போய்ட்டியா.? தங்கம் விலை இன்றும் உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?
Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?
TVK Vijay: விஜய் 2 தொகுதிகளில் போட்டி.. தோல்வி பயம் காரணமா? - ஆதவ் அர்ஜூனா பரபரப்பு விளக்கம்!
TVK Vijay: விஜய் 2 தொகுதிகளில் போட்டி.. தோல்வி பயம் காரணமா? - ஆதவ் அர்ஜூனா பரபரப்பு விளக்கம்!
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
CSK Vs PBKS: சேப்பாக்கத்தில் தொடர்ந்து நான்காவது தோல்வி.. சிஎஸ்கே பிரச்னை என்ன? தீர்வு காண்பது யார்?
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
TN Congress: கட்சி பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா? - செல்வப்பெருந்தகையை சாடிய ஜோதிமணி!
Embed widget