மேலும் அறிய

Cyber ​​Security: கல்லூரிகளில் சைபர் பாதுகாப்பு: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி முக்கிய அறிவிப்பு

சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களையும் சிறந்த நடைமுறைகளையும் வழங்குகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில், சைபர் பாதுகாப்பு என்பது தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. கல்வித் துறையிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், டிஜிட்டல் பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் பொறுப்பான ஆன்லைன் நடத்தை குறித்த விழிப்புணர்வையும், நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்ப்பது அத்தியாவசியம் ஆகிறது.

பாராளுமன்றக் குழுவின் பரிந்துரை

இதற்கிடையே பாராளுமன்ற நிலைக்குழு, தனது 254வது அறிக்கையில், "சைபர் குற்றங்கள் - விளைவுகள், பாதுகாப்பு மற்றும் தடுப்பு" என்ற தலைப்பில், உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளிலும் சைபர் கல்வியை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமையின் அடிப்படைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

யுஜிசி கையேடு வெளியீடு

இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2024 நவம்பர் 6 அன்று "உயர்கல்வி நிறுவனங்களுக்கான சைபர் சுகாதாரத்தின் அடிப்படைகள் குறித்த கையேடு" (Handbook on Basics of Cyber Hygiene for Higher Education Institutions) ஒன்றை வெளியிட்டுள்ளது.

இக்கையேடு, சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களையும் சிறந்த நடைமுறைகளையும் வழங்குகிறது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிறுவனங்களுக்கு யுஜிசி விடுத்த வேண்டுகோள்

இந்த நிலையில் யுஜிசி வெளியிட்டுள்ள இந்த கையேட்டைப் பின்பற்றி, உயர்கல்வி நிறுவனங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:

  • கையேட்டை உங்கள் பல்கலைக்கழகம்/ கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றவும்.
  • அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுடன் கையேட்டின் சாஃப்ட் காப்பியைப் பகிரவும்.
  • உங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் கையேட்டைப் பிரபலப்படுத்தவும்.
  • மாணவர் சேர்க்கை திட்டத்தின்போது, கையேட்டின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் ஒரு கட்டாய சைபர் பாதுகாப்பு அமர்வை நடத்தி, புதிய மாணவர்களுக்கு பாதுகாப்பான ஆன்லைன் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

இந்த நடவடிக்கைகள் மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, டிஜிட்டல் உலகில் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என்று யுஜிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Ather Konarc Vs Bajaj Chetak: ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Embed widget