மேலும் அறிய

TNPSC : குரூப் 2, 2ஏ தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம்: டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களின் விவரங்களைத் தவறாக உள்ளீடு செய்திருந்தால் அதைத் திருத்தம் செய்துகொள்ளலாம்  என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ கிரண்‌ குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு ॥( நேர்முகத்‌ தேர்வு பதவிகள்‌ மற்றும்‌ நேர்முகத்‌ தேர்வு அல்லாத பதவிகள்‌) (குரூப் 2, குரூப் 2ஏ-க்கான அறிவிக்கையை 23.02.2022 அன்று வெளியிட்டது. அத்தேர்விற்கு, இணைய வழியில்‌ விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 23.03.2022 ஆகும்.

அத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களில்‌, பலர்‌ விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த‌ பிறகு, சில தகவல்களைத் தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும்‌, அவற்றைத் திருத்தம்‌ செய்ய அனுமதிக்கக் கோரியும்‌ தேர்வாணையத்தைத் தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தொடர்புகொண்டு வருகின்றனர்‌.

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக. விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படுவதன்‌ மூலம்‌ வெற்றியைத்‌ தவறவிடும்‌ தேர்வர்களுக்கு, வாய்ப்பளிக்கும்‌ வகையில்‌ 14.03.2022 முதல்‌ மேற்கூறப்பட்ட பதவிகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள விரும்புவோர்‌, விண்ணப்பத்தினைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 23.03.2022 வரை விண்ணப்பதாரர்களே தனது OTR மூலமாக திருத்தம்‌ மேற்கொள்ள தேர்வாணைய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்விற்கான தனது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய விரும்பம்‌ தேர்வர்கள்‌ பின்வரும்‌ நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. இணையவழி விண்ணப்பத்தில்‌ உள்ள தகவல்களில்‌, ஒரு சில தகவல்கள்‌ தேர்வரின்‌ ஒருமுறை நிரந்தரப் பதிவில்‌ இருந்து முன்கொணரப்பட்டவை. அவ்வாறான தகவல்களைத்‌ திருத்தம்‌ செய்வதற்கு முதலில்‌ தனது ஒருமுறை நிரந்தரப் பதிவில்‌ (OTR) சென்று உரிய திருத்தங்களை செய்து, அவற்றை சேமிக்கவும்‌.

2. அதன்‌ பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDIT-ல்‌ சென்று,விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய விரும்பும்‌ விவரங்களை திருத்தம்‌ செய்து, இறுதியாகச் சேமித்து, அதனை சமர்ப்பித்து அதற்குரிய நகலினை அச்சுப்பிரதி எடுத்துக்கொள்ளவும்‌.

3. விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்ப்பிக்கவில்லையென்றால்‌, தேர்வர்‌ இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள்‌ விண்ணப்பத்தில்‌ அளித்துள்ள தகவல்கள்‌ மட்டுமே கருத்தில்‌ கொள்ளப்படும்‌.

4, திருத்தம்‌ செய்யப்பட்ட விவரங்களின்‌ அடிப்படையில்‌, தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால்‌, உரிய தேர்வுக்‌ கட்டணத்தை இணைய வழியாகச் செலுத்தவும்‌. உரியத்‌ தேர்வுக்‌ கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய தேர்வர்கள்‌, மீண்டும்‌ செலுத்தத் தேவையில்லை.

இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்யக்கோரி தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாக தேர்வாணையத்தைப் பல விண்ணப்பதாரர்கள்‌ தொடர்பு கொண்டனர்‌. அவர்களுக்கு, 'விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, திருத்தம்‌ செய்ய இயலாது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, திருத்தம்‌ செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதால்‌, முன்னர்‌ தொலைபேசி மற்றும்‌ மின்னஞ்சல்‌ மூலமாகத் தேர்வாணையத்தைத் தொடர்பு கொண்டவர்களுக்கு, தற்போது தனித்தனியே தகவல்‌ அளிக்க இயலாது. இச்செய்தி வெளியீட்டில்‌ கூறப்பட்டுள்ள நடைமுறையினைப் பின்பற்றி தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

தேர்வர்களுக்கு ஏற்படும்‌ தவிர்க்க இயலாத சந்தேகங்களுக்கு, ஒரு முறை நிரந்தரப் பதிவு மற்றும்‌ இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ செய்ய helpdesk@tnpscexam.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியையும்‌, இதர சந்தேகங்களுக்கும் grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியையும்‌ பயன்படுத்தவும்‌. ஒரே பொருள்‌ தொடர்பான சந்தேகங்களுக்கு, இரண்டு மின்னஞ்சல்‌ முகவரிக்கும்‌ மின்னஞ்சல்‌ அனுப்புவதைத் தவிர்க்குமாறும்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

இதுகுறித்து விளக்கம்‌ ஏதேனும்‌ தேவைப்படுமானால்‌, 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிக்கு, அலுவலக வேலை நாட்களில்‌, காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை தொடர்புகொள்ளலாம்''‌.

இவ்வாறு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
PM Yasasvi Scholarship : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
New Baleno CNG on EMI: ரூ.50,000 சம்பளத்துல அட்டகாசமான புதிய மாருதி பலேனோ CNG கார வாங்க முடியுமா.? EMI எவ்வளவு வரும்.?
ரூ.50,000 சம்பளத்துல அட்டகாசமான புதிய மாருதி பலேனோ CNG கார வாங்க முடியுமா.? EMI எவ்வளவு வரும்.?
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
Embed widget