Trains Cancelled: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி !நாளை 6 மணி நேர ரயில்கள் ரத்து - முழு விவரம் உள்ளே!
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, சூளூர்பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை 6 மணி நேர புறநகர் ரயில் சேவையானது ரத்து செய்யப்படுகிறது

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், நாளை (பிப்ரவரி 22, 2026) மின்சார ரயில் (EMU) மற்றும் மெமு (MEMU) ரயில் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, சூளூர்பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 09:10 மணி முதல் மதியம் 15:10 மணி வரை (6 மணி நேரம்) இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முழுமையாக ரத்து செய்யப்படும் மெமு (MEMU) ரயில்கள்:
நாளை கீழ்க்கண்ட ஐந்து மெமு பயணிகள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:
-
வண்டி எண் 66029: சென்னை மூர் மார்க்கெட் - சூளூர்பேட்டை (காலை 05:40 மணி)
-
வண்டி எண் 66035: சூளூர்பேட்டை - நெல்லூர் (காலை 07:50 மணி)
-
வண்டி எண் 66036: நெல்லூர் - சூளூர்பேட்டை (காலை 10:20 மணி)
-
வண்டி எண் 66030: சூளூர்பேட்டை - சென்னை மூர் மார்க்கெட் (மதியம் 12:35 மணி)
-
வண்டி எண் 66000: ஆவடி - சென்னை மூர் மார்க்கெட் (அதிகாலை 04:25 மணி)
பகுதியாக ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள்:
சூளூர்பேட்டை மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் எளாவூர் மற்றும் சூளூர்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூர் மார்க்கெட்டில் இருந்து சூளூர்பேட்டை நோக்கி:
-
வண்டி எண் 42407 (07:30 மணி), 42411 (08:35 மணி) மற்றும் 42413 (10:15 மணி) ஆகிய ரயில்கள் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். எளாவூர் - சூளூர்பேட்டை இடையே இவை இயங்காது.
சூளூர்பேட்டையில் இருந்து மூர் மார்க்கெட் நோக்கி:
-
வண்டி எண் 42408 (10:00 மணி), 42410 (11:45 மணி) மற்றும் 42414 (13:15 மணி) ஆகிய ரயில்கள் சூளூர்பேட்டைக்கு பதிலாக எளாவூரில் இருந்து சென்னை நோக்கி இயக்கப்படும். சூளூர்பேட்டை - எளாவூர் இடையே இவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்:
நாளை பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், இந்த கால அட்டவணை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில் நிலையங்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளையும் கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
























