மேலும் அறிய

NEET Protest : நீட் தேர்வில் ஊழல், முறைகேடு; ஜூன் 21 காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஊழல், முறைகேடு நடந்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும் ஜூன் 21ஆம் தேதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தேர்வுக்கு முன்னதாகவே வட மாநிலங்களில் வினாத்தாள் வெளியிடப்பட்டதாகப் புகார் எழுந்தது. தேர்வின்போது ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாகவும் பிஹாரில் சிலர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் நீட் தேர்வு முடிவுகளின்போது சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதேபோல ஒரே தேர்வறையைச் சேர்ந்த 6 மாணவர்கள் தேசிய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றனர். அதே அறையில் தேர்வெழுதிய 2 பேர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று இருந்தனர்.

இவை உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கருணை மதிப்பெண்கள் விவகாரம்

இதற்கிடையே கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இந்த மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் அடுத்தடுத்து, முறைகேடு நிகழ்வுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. அண்மையில்கூட பிஹாரில் சிலரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

அமைதியாக வேடிக்கை பார்க்கும் அரசு

இந்த நிலையில், ஆளும் என்டிஏ அரசு இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் செயல்பாடு இன்றி இருப்பதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எதிர்க் கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. குறிப்பாக ஜூன் 21ஆம் தேதி நாடுதழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது வாக்குறுதியில், நீட் நுழைவுத் தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் - பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
"போதைப்பாதை அழிவுப்பாதை; கல்விப்பாதையே உயர்வுப்பாதை" - நீடூர் இப்தார் விழாவில் மயிலாடுதுறை SP அட்வைஸ்..!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Embed widget