மேலும் அறிய

கலைத் திருவிழா நடத்துவதா? காலாண்டுத் தேர்வு நடத்துவதா? ஆசிரியர் கூட்டணி கேள்வி

கலைத் திருவிழா நிகழ்ச்சி வரவேற்க வேண்டிய நிகழ்ச்சியாக இருந்தாலும் 20 நாட்கள் பயிற்சி நடத்துகின்ற பொழுது மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது?

கலைத் திருவிழா நடத்துவதா? காலாண்டுத் தேர்வு நடத்துவதா? என பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

 கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறுவதாக EMIS - ல் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் வலியுறுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

 இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்து உள்ளதாவது:

’’திருச்சி மாவட்டத்தில் 2 இலட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள், அந்த இரண்டு இலட்சம் மாணவர்களையும் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பி உள்ளனர். அறிவிப்புக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் உள்ள புரிதலைக் கூட தெரியாதவர்கள் ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வு நேரத்தில்தான் இந்த கலைத் திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.

 மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது?

கலைத் திருவிழா நிகழ்ச்சி வரவேற்க வேண்டிய நிகழ்ச்சியாக இருந்தாலும் 20 நாட்கள் பயிற்சி நடத்துகின்ற பொழுது மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது? காலாண்டுத் தேர்வை மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்? ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் மாணவர்களின் கல்வி நலனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’.

 இவ்வாறு ஐபெட்டோ (தமிழக ஆசிரியர் கூட்டணி) அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கலைத் திருவிழா

தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்‌ கலைத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ விதமாக, கலைத் திருவிழா அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டன.

அனைத்து மாணவர்களையும் பங்குபெற ஊக்கப்படுத்த வேண்டும்

அடுத்தடுத்த ஆண்டுகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1 முதல் 12அம் வகுப்பு வரை கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில், அனைத்து மாணவர்களையும் பங்குபெற ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
TNPSC CTSE: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி அரசு வேலை- விண்ணப்பித்து விட்டீர்களா? விவரம்!
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த உளவு அமைப்பு.. அச்சத்தில் மக்கள்!
மும்பையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்? அலர்ட் கொடுத்த IB.. அச்சத்தில் மக்கள்!
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Embed widget