மேலும் அறிய

அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்: சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி- பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கூறியுள்ளதாவது:

மாணவர்களை தான் சார்ந்துள்ள இயற்கை சூழலை நேசிக்க செய்வதன் மூலம் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்க்கமாக அறிந்து, அதற்கான தீர்வுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இதன்படி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புக் கல்வி இயற்கையோடு இணைந்து மாணவர்களை இயற்கைச் சூழலை நேசிக்கச் செய்வதன் மூலம் காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்க்கமாக அறிந்து அதற்கான தீர்வுகளை மாணவர்களே கண்டறியும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிலையான மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள எதிர்காலத்தை நோக்கிய கல்வி செயல்பாடுகள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் மாணவர்களை சுற்றுச்சூழலின் பொறுப்பாளர்களாக ஆக்குவதற்கு உதவுகிறது. பள்ளிகளுக்கு வெளியே சுற்றுசூழலை பாதுகாப்பது மற்றும் சமூகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான பொறுப்பு உணர்வை வளர்க்கிறது.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. சுற்றுச்சூழல் கல்வி:

பயிற்சி பட்டறைகள், விளக்கக்காட்சிகள் மற்றும் கருத்தரங்க அமர்வுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்குக் கற்பித்தல்.

2. கழிவுகளைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை:

பள்ளி வளாகத்திற்குள் கழிவு உற்பத்தியைக் குறைப்பதற்கான உத்திகளை செயல்படுத்துவது, சுற்றுச்சூழல் மன்றம், மறுசுழற்சி, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்தல் போன்ற நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

3. பசுமை முன்முயற்சிகள்:

மரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குதல் போன்ற பள்ளிச் சூழலை பசுமையாக்குவதற்கு பங்களிக்கும் திட்டங்களை மன்றத்தின் மூலம் தீவிரமாக தொடங்குதல் மற்றும் பங்கேற்றல்.

4. ஆற்றல் மற்றும் வள பாதுகாப்பு:

பொறுப்பான ஆற்றல் நுகர்வு மற்றும் வள பயன்பாட்டிற்கு ஆதரவாக, சுற்றுச்சூழல் மன்றம் பள்ளி உட்கட்டமைப்பை அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மாணவர்களின் செயல்பாடுகள்:

மாற்றுவதில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியானது மாணவர்களிடம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் கல்வி ஆண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சுற்றுச்சூழல் பட்டறைகள்:

நிலையான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய வழக்கமான பயிலரங்குகள் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2. தூய்மை இயக்கங்கள்:

சுற்றுசூழல் மன்றங்கள் பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்தும் இயக்கங்களை நடத்துகிறது, நமது சுற்றுச்சூழலை குப்பைகள் இல்லாமல் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

3. பசுமைப் போட்டிகள்:

சுற்றுச்சூழல் குறித்த கலைப் போட்டிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் கொண்ட காட்சி அரங்கங்கள் மற்றும் வினாடி வினா போட்டிகள் போன்ற போட்டிகள் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி அறியும் போது மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்கின்றன.

4. பசுமை இயக்கங்கள்:

பசுமைப் பரப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் மன்றம் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் மற்றும் மரங்களை பராமரித்தல் போன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துகிறது.

5.நெகிழி இல்லா பள்ளி வளாகம்:

சுற்றுபுறத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல்.

 பள்ளி மாணவர்கள் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து மேம்படுத்தக்கூடியவை:

1. சுற்றுச்சூழல் கல்வியை வளர்த்துக்கொள்ளல்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வைத் திறம்பட ஊக்குவிக்கும் முன், காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, காடழிப்பு மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி மாணவர்களை பயிற்றுவிப்பது அவசியம். இந்தச் சிக்கல்களின் காரணங்களையும் விளைவுகளையும் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் திறம்பட மற்றவர்களுக்குத் தெரிவிக்க உதவும்.

2.சுற்றுச்சூழல் குழுக்களில் ஈடுபடுங்கள்:

உங்கள் பள்ளியில் அல்லது உங்கள் சமூகத்தில் உள்ள சுற்றுச்சூழல் மன்றம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சேரவும். இந்த குழுக்கள் பெரும்பாலும் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளில் கவனம் நிகழ்வுகள், செலுத்தும் முயற்சிகளை ஏற்பாடு செய்கின்றன.

3. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும்:

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய தகவல்கள், கட்டுரைகள் மற்றும் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தவும், சுற்றுசூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் முன்முயற்சிகளை ஊக்குவிக்க சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம்.

4.சக மாணவர்களுடனான ஒத்துழைப்பு :

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அல்லது திட்டங்களை ஒழுங்கமைக்க உங்கள் வகுப்பு தோழர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உங்கள் முயற்சிகளை அதிகரிக்கலாம்.

5. நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல்:

மறுசுழற்சி திட்டங்கள், ஆற்றல் திறன் கொண்ட முன்முயற்சிகள் அல்லது கரிம கழிவுகளை உரமாக்குதல் போன்ற நிலையான நடைமுறைகளை செயல்படுத்த உங்கள் தோழர்களை ஊக்குவிக்கவும், பள்ளிச் செயல்பாடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கும் நெறிமுறைகளை வழங்க முடியும்.

6. குறுங்காடு அமைத்தல்

பள்ளிகளில் குறைந்தபட்சம் 600 சதுர அடிகள் காலியிடம் இருப்பின் அதில் மாணவர் பங்களிப்புடன் குறுங்காடுகள் அமைக்கலாம். இதில் 2 அடி நீள அகலத்தில் மரக்கன்றுகள் (பெரிய மரங்கள், சிறுமரங்கள், குறுமரங்கள், புதர்செடிகள் மற்றும் செடிகள்) கலந்த நிலையில் நாட்டு மரங்களாக தேர்ந்தெடுத்து நடவேண்டும். இதில் அரசமரம், ஆலமரம், வேப்பமரம் மாமரம் காட்டுவாகை, பனை, தென்னை போன்றவற்றை தவிர்க்கவும்.

7. விதைப்பெட்டி

ஒவ்வொரு பள்ளியிலும் விதைப்பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் உலர்ந்த விதைகளை இப்பெட்டியில் போடுவர். வாரம் ஒருமுறை அவற்றை சேகரித்து விதைப்படுகை (Mother Bed) அமைத்து அதில் விதைத்து நாற்றுகளாக வரும்வரை வளர்த்து, வளர்பைகளில் (Grow Bag) மரக்கன்றுகளாக வளர்த்து, பள்ளியிலேயோ, சுற்றுபகுதிகளிலேயோ நட்டு வளர்க்கலாம்.

8. நெகிழி வளர் பைகள்

மாணவர்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட நெகிழிப்பைகளை கழுவி சுத்தம் செய்து அதில் மண், உரம் கலந்த கலவைகளை இட்டு மரக்கன்றுகளை வளர்க்கலாம். இதன் மூலம் நெகிழி வளர்பைகள் (Grow Bag) தவிர்க்கப்பட்டு பால்பைகள் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

9. விதைப்பந்து உருவாக்குதல்

மாணவர்கள் கோடைக்கால விடுமுறை மற்றும் வெளியூர் பயணங்களின் போது மரக்கன்றுகளை நேரடியாக நடுவதற்கு பதில் விதைப்பந்துகளாக செய்து காட்டு பகுதிகளிலோ அல்லது பேருந்து, புகைவண்டி பயணத்தடங்களிலோ வீசி செல்வதன் மூலம் பறவைகள், விலங்குகளை போல மாணவர்களையும் சுற்று சூழல் நண்பர்களாக மாற்றலாம்.

10. மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தல்

வகுப்பு, பள்ளி வளாகங்களில் மக்கும் குப்பை மக்காகுப்பைக்கு தனித்தனி தொட்டிகள் அமைத்து சேகரிக்கலாம். மக்கும் குப்பை உரமாகவும், மக்கா குப்பை மறுசுழற்சி செய்யவும் மறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும் என்பதால் முடியும் என்பதால் அவை குப்பையாக இல்லாமல் செல்வமாக மாறும் என்பதையும் மக்கும் குப்பை, மக்கா குப்பை சேர்த்தால் தான் அது உண்மையான குப்பை என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும்.

11. உரம் தயாரித்தல்

மண்புழு உரம், பஞ்சகவியா மீன் அமிலம் தயாரிப்பதற்கான செயல்முறைகளை மாணவர்களுக்கு கற்றுத்தரலாம்.

இவ்வாறு மாவட்டங்களில் உள்ள சுற்றுசூழல் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget