மேலும் அறிய

CBSE Exam | ஒமிக்ரான் நேரத்தில் நேரடித் தேர்வா? ஆன்லைன் ஓகே! சிபிஎஸ்இ தேர்வில் வலியுறுத்தும் பெற்றோர்கள்!

நேரடியாக மாணவர்களை அழைத்துப் பொதுத் தேர்வுகளை நடத்துவது மருத்துவ சீரழிவை உருவாக்கும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை அபாயத்தில் தள்ளும்.   

2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வை ஆஃப்லைன் முறையோடு ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும் என்று சுமார் 8 ஆயிரம் பெற்றோர்கள், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தி உள்ளனர். 

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒமிக்ரான் தொற்று பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே 2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தேர்வை ஆஃப்லைன் முறையோடு ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும் என்று சுமார் 8 ஆயிரம் பெற்றோர்கள், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தி உள்ளனர். 


CBSE Exam | ஒமிக்ரான் நேரத்தில் நேரடித் தேர்வா? ஆன்லைன் ஓகே! சிபிஎஸ்இ தேர்வில் வலியுறுத்தும் பெற்றோர்கள்!

இதுகுறித்துப் பெற்றோர்கள் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் இளம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழிமுறைகளை வெளியிட்டுள்ளன. 

இந்த சூழலில் நேரடியாக மாணவர்களை அழைத்துப் பொதுத் தேர்வுகளை நடத்துவது மருத்துவ சீரழிவை உருவாக்கும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை அபாயத்தில் தள்ளும்.   

"மாணவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் 3 முதல் 4 சதவீதம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பண்டிகை காலம் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நேரடித் தேர்வுகளால் கோவிட் வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்பட்டால் பெருந்தொற்று வேகம் பன்மடங்கு அதிகரிக்கக் கூடும். 



CBSE Exam | ஒமிக்ரான் நேரத்தில் நேரடித் தேர்வா? ஆன்லைன் ஓகே! சிபிஎஸ்இ தேர்வில் வலியுறுத்தும் பெற்றோர்கள்!

ஆன்லைன் வழியாகக் கற்றல் நடத்தப்பட்டபோது தேர்வு மதிப்பீட்டையும் ஆன்லைனிலேயே நடத்துவதுதான் முறையாக இருக்கக்கூடும். சிபிஎஸ்இ கொள்கையின் அடிப்படையில், பெற்றோரின் அனுமதியைப் பெற்றே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். ஆனால் தேர்வுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தாதா? 

சிபிஎஸ்இ தன்னுடைய மாணவர்களை மதிப்பிடும்போது, அவர்கள் வாழ்வது மற்றும் உடன்நலனுக்கான உரிமையே பிரதானமாக இருக்க வேண்டும். இன்னும் சில மாநிலங்கள் தீவிரமான கரோனா தொற்றுடனேயே இருக்கின்றன. இதனால் இந்தியா முழுவதும் நேரடியாக ஆஃப்லைன் முறையில் பொதுத்தேர்வு நடத்துவது என்பது தற்போதைய கரோனா விதிமுறைகளை மீறுவதாகவே அமையும். அதனால் 2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வை ஆஃப்லைன் முறையோடு ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும்." 

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget