மேலும் அறிய

Periyar University: சர்ச்சைகளின் கூடாரமா சேலம் பெரியார் பல்கலை? புத்தகம் வெளியிடக்கூடாது என்ற சுற்றறிக்கையால் சர்ச்சை!

சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் புத்தகங்களை வெளியிடக் கூடாது என்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் புத்தகங்களை வெளியிடக் கூடாது. அவ்வாறு வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றி வரும் பேராசிரியர்களும் நிர்வாகப் பணியாளர்களும் புத்தகங்களை வெளியிடக் கூடாது என்று பல்கலை. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’அனுமதி பெறாமல் மற்றும் அனுமதி பெற்று வெளியிடப்பட்ட புத்தகங்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் இதைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல ஊடகங்களிலும் தாங்களாகப் எந்தப் பேட்டியும் அளிக்கக் கூடாது. இவை அனைத்துக்கும் முன் அனுமதி பெற வேண்டும்’’ என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

தொடரும் சர்ச்சை

முன்னதாக, தந்தைப் பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ’’பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக  இதழியல் துறை இணைப் பேராசிரியரும் பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குனருமான இரா.சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க, சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது. சுப்பிரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பாணை அனுப்பியது சர்ச்சைகளைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக் குழு அமைப்பு

அதேபோல சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆசிரியர்‌ நியமனத்தில்‌ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக வரபெற்ற புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்தது. குறிப்பாக உயர்கல்வித்‌ துறை அரசு கூடுதல்‌ செயலாளர்‌ சு.படினிசாமி மற்றும்‌ அரசு இணைச்‌ செயலாளர்‌ இளங்கோ ஹென்றி தாஸ்‌ ஆகியோர்‌ கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.‌

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. 

துணை வேந்தர் கைது

எல்லாவற்றுக்கும் மேலாக பெரியார் பலகலை கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் மாநகர் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Embed widget