மேலும் அறிய

IGNOU Admission: தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: IGNOU அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதற்கு மாணவர்கள் ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம். 

இக்னோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசு பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம். இங்கு தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் 56 பிராந்திய மையங்களைக் (RC) கொண்டுள்ளது. 11 அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மையங்களையும்  ( 6 IGNOU- Army RRC, 4 IGNOU-Navy RRC, 1- IGNOU- Assam Rifles RRC) வைத்துள்ளது. அதேபோல நாடு முழுவதும் 2 ஆயிரம் கற்போர் ஆதரவு மையத்தையும் தன்வசம் வைத்துள்ளது. இந்த நிலையில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

’’இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், 2024 ஜூலை மாத மாணவர் சேர்க்கையில் சேரலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

தொலைதூரக் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் இணையவழியில் ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், https://ignouadmission.samarth.edu.in/index.php/registration/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. 

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர  https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். 044-26618040 என்ற தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்’’. 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு:  011-29571301 அல்லது 011-29571528.

இ- மெயில்: csrc@ignou.ac.in

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது, கட்டணம் செலுத்துவது, பொதுவான கேள்விகள் குறித்து பதில் அறிய  https://ignouadmission.samarth.edu.in/index.php/site/faq என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
USA vs ENG: ஜோஸ் பட்லர் அதிரடி.. அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
ஜாமின் நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றத்தை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால் - சூடுபிடிக்கும் டெல்லி அரசியல்
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
பொங்கலில் கிடந்த பல்லி! சாப்பாட்டை திறந்த வங்கி ஊழியர் ஷாக் - நெல்லையில் பரபரப்பு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
AUS Vs AFG: ”வெல்டன் தம்பி..”ஆப்கானிஸ்தானை வாழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான்!
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் ஆக்கப்படுவார்களா? சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வருமா?
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Embed widget