மேலும் அறிய

NEET Impact: தமிழ்வழி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கியதா நீட்? ஏ.கே.ராஜன் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழி மாணவர்கள் சொற்ப அளவில் மட்டுமே சேர்ந்து வருவது ஏ.கே.ராஜன்குழு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு என்ன என்பதை புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையில் 2010-ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையையும், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கை வரை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு வருகைக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலே இருந்துள்ளது என்ற வேதனைக்குரிய தகவல் தெரியவந்துள்ளது. 

நீட் தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள்  2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 646 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட 2017ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை தமிழ்வழியில் பயின்ற 545 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 

நீட் தேர்வுக்கு முன்பு தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை : 

2010- 2011 :

                                மொத்த இடங்கள்  - 2349

                      தமிழ் வழி மாணவர்கள் - 465

2011-2012 :

                                    மொத்த இடங்கள் – 2543

                        தமிழ் வழி மாணவர்கள்  - 459

2012-2013

                                     மொத்த இடங்கள் - 2707

                          தமிழ் வழி மாணவர்கள் - 503

2013- 2014

                                     மொத்த இடங்கள் - 3267

                         தமிழ் வழி மாணவர்கள்  - 570

2014-2015

                                    மொத்த இடங்கள்   - 3147

                          தமிழ்வழி மாணவர்கள்   - 602

2015-2016

                                           மொத்த இடங்கள்- 3015

                            தமிழ்வழி மாணவர்கள்     - 510

2016-2017

                                             மொத்த இடங்கள் – 3608

                               தமிழ் வழி மாணவர்கள்    - 537

நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை :

தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:

2017 – 2018 :

                                       மொத்த இடங்கள் – 3517

                        தமிழ்வழி மாணவர்கள்      - 56

2018-2019

                                         மொத்த இடங்கள் – 3638

                          தமிழ்வழி மாணவர்கள்      - 119

2019-2020

                                              மொத்த இடங்கள் – 4202

                                     தமிழ்வழி மாணவர்கள் -  71

2020 -2021:

                                             மொத்த இடங்கள் – 4129

                                  தமிழ்வழி மாணவர்கள்  - 82

கடந்தாண்டு தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 336 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். அவர்களில் 217 பேர் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget