மேலும் அறிய

Manonmaniam Sundaranar University: அமைச்சர் பொன்முடி இன்றி நடந்த பட்டமளிப்பு விழா- மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர்!

இந்தாண்டு குறிப்பாக இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான பொன்முடி கலந்து கொள்ளவில்லை.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 29 வது பட்டமளிப்பு விழா பல்கழைக்கழகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான பொன்முடி கலந்து கொள்ளவில்லை.

கடந்த 2021- 22 ஆம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு,  பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழத்தின் கிளை கல்லூரிகளில் மொத்தம் 13,236 ஆண்களும், 30,625 பெண்கள் என 43,861 பேர் பட்டம் பெற தகுதியானவர்களாக உள்ளனர். 

இவர்களில் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங்களில் முதலாம் இடம்பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். காயல்பட்டினம் வாவு மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து இரண்டு பதக்கங்களை பெற்றார்.

முன்னதாக  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் விழா மேடையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘’இமயம் முதல் குமரி வரை பல்வேறு வளங்களை இந்திய நாடு பெற்றுள்ளது. மேலை நாடுகளில் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு முன்பே நாளந்தா, தக்சசீலம் போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள் இருந்தது. பாரம்பரியமிக்க நம் நாட்டில் மேலை நாடுகளில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு முன்பே பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.


Manonmaniam Sundaranar University: அமைச்சர் பொன்முடி இன்றி நடந்த பட்டமளிப்பு விழா- மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர்!

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்தபோது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக 1983ல் காதம்பரி என்பவர் பட்டம் பெற்றார். தற்போது அதிகளவில் பெண்கள் பட்டம் பெறுகின்றீர்கள். உலக சுற்றுலாத்தலத்தில்  இந்திய சுற்றுலா துறையால் ”அதிதி தேவோ பவ ” என்ற வாசகம் முழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாசகம் இந்திய கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் பற்றி பேசுகிறது. தைத்ரிய உபநிஷத்தில் வரும் மாத்ரு தேவோ பவ, பிதிர் தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்ற முழக்கங்கள் நம் தாய், தந்தை, ஆசான், விருந்தினர்களை கடவுளாக கருதவேண்டும் என சொல்கிறது. மாணவர்கள் அந்த வாசகங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.

பட்டம்பெறுவோர் 20 வயதுடையவராக இருக்கிறீர்கள். நீங்கள் இனி பறந்து விரிந்து இருக்கும் உலகத்திற்கு செல்லப்போகீறீர்கள். 40 வயதில் உலகை முழுதும் தெரிந்துகொண்டு உங்களால் சாதனைபடைக்கமுடியும், மகிழ்ச்சி என்பது வெளி உலகில் எங்கிருக்கிறது என சொல்லமுடியாது. உங்களை நீங்கள் வென்றால் உலகை நீங்கள் வெற்றி பெறமுடியும். 2047 உலகின் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும். முன்னேறிய இளம் இந்தியாவை உருவாக்குவதில் இளம் பட்டதாரிகள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.

இந்தியாவின் பழங்காலம் பாரம்பரியமிக்கதாக உள்ளது. வருங்காலம் ஒளிமிகுந்த காலமாக அமைய உள்ளது. தற்போதைய சூழலில் நிச்சயமற்ற நிலை இருந்து வருகிறது. 2047-ல் இந்திய உலகின் தலை சிறந்த நாடாக மாறுவதற்கான கட்டமைப்பு பணிகளை இளம் பட்டதாரிகள் மேற்கொள்ள வேண்டும். இளம்பட்டதாரிகள் இந்த நாட்டிற்கு பல்வேறு பணிகளை திருப்பி அளிக்க வேண்டியதுள்ளது. சமூக பங்களிப்பை நீங்கள் நம் நாட்டிற்கு வழங்குவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.  நாடு ஒளிமிகுந்த பாதையை அடைய இளம்பட்டதாரிகள் தங்களது பங்களிப்பை செய்யவேண்டும்’’.

இவ்வாறு பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் டெப்ராய் பேசினார்..


Manonmaniam Sundaranar University: அமைச்சர் பொன்முடி இன்றி நடந்த பட்டமளிப்பு விழா- மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர்!

இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். குறிப்பாக நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் மற்றும் இணைவேந்தரான தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிப்பர். ஆனால் இந்தாண்டு குறிப்பாக இன்று நடைபெற்ற பட்டமளிப்புவிழாவில் உயர்கல்வித்துறை அமைச்சரும், இணைவேந்தருமான பொன்முடி கலந்து கொள்ளவில்லை.

நேற்று காலை முதல் அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் அமலாக்கதுறை சோதனை நடத்தியது. பல மணி நேரம் நடந்த சோதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு விடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

மேலும் அண்மைக்காலமாக ஆளுநருக்கும்,  திமுக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதிலும் எதிரொலித்தது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை சோதனையால்  அமைச்சர் இன்று தூத்துக்குடியில் பங்கேற்க இருந்த  நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் நெல்லையில்  நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்  ஆளுநர்  மட்டும் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
உதவித்தொகை, வேலை உறுதி: ஐஐடி சென்னையில் எம்டெக், எம்எஸ்சி, எம்ஏ படிப்புகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Embed widget