மேலும் அறிய

ஸ்கூலு இருக்கு.. ஆளே இல்ல.. ஒரு மாணவர்கூட இல்லாத 22 பள்ளிகள்! அதிர்ச்சி ஏற்படுத்திய தகவல்!

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் உள்ளனர் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் உள்ளனர் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை குறித்து 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில், பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ’’மாநிலம் முழுவதும் உள்ள 11 அரசுப் பள்ளிகளில் தலா ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். 24 பள்ளிகளில் தலா 2 மாணவர்களும், 41 பள்ளிகளில் தலா 3 மாணவர்களும் படித்து வருகின்றனர். அதேபோல 50 பள்ளிகளில் தலா 4 மாணவர்களும், 77 பள்ளிகளில் தலா 5 மாணவர்களும், 114 பள்ளிகளில் தலா 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் தலா 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் தலா 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் தலா 9 மாணவர்களும் படித்து வருகின்றனர். 


ஸ்கூலு இருக்கு.. ஆளே இல்ல.. ஒரு மாணவர்கூட இல்லாத 22 பள்ளிகள்! அதிர்ச்சி ஏற்படுத்திய தகவல்!

இந்த சூழலில், ஒரு மாணவர் கூட இல்லாமல் 22 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உதவியுடன் பள்ளிகள் திறக்கப்பட்ட மறு நாளன்று (ஜூன் 14-ம் தேதி), மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 3,131 பள்ளிகளில் 10 முதல் 60 மாணவர்கள் வரை படிக்கின்றனர். அங்கு தலைமை ஆசிரியரே 5 வகுப்புகளை நடத்தும் சூழல் இருக்கிறது. அதேபோல 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன, அங்கெல்லாம் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் அதற்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தித் தரப்படும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், பயிற்சியில் பங்கேற்ற நாட்களுக்கு பின்னர் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 31,336 பள்ளிகளில் 1,08,537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25,50,997 மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Embed widget