மேலும் அறிய

சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி கொடுக்கும் போது இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

பெண்ணுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கைது.

ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பாலியல் சீண்டல்

சென்னை புனித தோமையர்மலை காவல் மாவட்ட நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியில் சேர்ந்த போது , பயிற்சி பள்ளி உரிமையாளரான கோபால கிருஷ்ணன் ( வயது 60 ) என்பவர் அப்பெண்ணிற்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிப்பதற்காக , வேளச்சேரி இரயில் நிலைய சாலை அருகே அழைத்து சென்று பயிற்சி அளிப்பது போல , அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பயிற்சி பள்ளி உரிமையாளர் கைது

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , தீவிர விசாரணை செய்ததில், புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின் பேரில், எதிரி கோபாலகிருஷ்ணன் ( வயது 60 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கணவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய வழக்கில் மனைவி கைது. கணவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், கொலை வழக்காக மாற்றம்

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் காதர் பாஷா ( வயது 42 ) என்பவர் மனைவி நிலவர் நிஷா மற்றும் மகளுடன் வசித்து வந்த போது காதர் பாஷா அடிக்கடி குடித்துவிட்டு மனைவி நிலவர் நிஷாவுடன் தகராறு செய்து வந்த நிலையில் , கடந்த 09.08.2025 அன்று இரவு காதர் பாஷா மதுபோதையில் நிலவர்நிஷாவிடம் தகராறு செய்து தாக்கி விட்டு தூங்க சென்ற நிலையில் , அதிகாலை (10.08.2025) ஆத்திரத்தில் இருந்த நிலவர் நிஷா வாலியில் எண்ணையை கொதிக்க வைத்து, தூங்கி கொண்டிருந்த கணவர் காதர் பாஷாவின் மேல் கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார்.

இதில் தீக்காயமடைந்த காதர் பாஷா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் குறித்து M-3 புழல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து , நிலவர் நிஷா ( வயது 48 ) என்பவரை 10.08.2025 அன்று கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்து விட்டதாக மருத்துவமனையில் இருந்த தகவல் கிடைத்ததின்பேரில் , காவல் குழுவினர் மருத்துவமனை சென்று விசாரணை செய்து , காதர் பாஷா இறந்தது உறுதி செய்யப்பட்டு, இறப்பு அறிக்கை பெற்று , இவ்வழக்கின் சட்டப்பிரிவு கொலை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget