மேலும் அறிய

சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி கொடுக்கும் போது இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

பெண்ணுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கைது.

ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பாலியல் சீண்டல்

சென்னை புனித தோமையர்மலை காவல் மாவட்ட நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியில் சேர்ந்த போது , பயிற்சி பள்ளி உரிமையாளரான கோபால கிருஷ்ணன் ( வயது 60 ) என்பவர் அப்பெண்ணிற்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிப்பதற்காக , வேளச்சேரி இரயில் நிலைய சாலை அருகே அழைத்து சென்று பயிற்சி அளிப்பது போல , அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பயிற்சி பள்ளி உரிமையாளர் கைது

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , தீவிர விசாரணை செய்ததில், புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின் பேரில், எதிரி கோபாலகிருஷ்ணன் ( வயது 60 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கணவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய வழக்கில் மனைவி கைது. கணவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், கொலை வழக்காக மாற்றம்

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் காதர் பாஷா ( வயது 42 ) என்பவர் மனைவி நிலவர் நிஷா மற்றும் மகளுடன் வசித்து வந்த போது காதர் பாஷா அடிக்கடி குடித்துவிட்டு மனைவி நிலவர் நிஷாவுடன் தகராறு செய்து வந்த நிலையில் , கடந்த 09.08.2025 அன்று இரவு காதர் பாஷா மதுபோதையில் நிலவர்நிஷாவிடம் தகராறு செய்து தாக்கி விட்டு தூங்க சென்ற நிலையில் , அதிகாலை (10.08.2025) ஆத்திரத்தில் இருந்த நிலவர் நிஷா வாலியில் எண்ணையை கொதிக்க வைத்து, தூங்கி கொண்டிருந்த கணவர் காதர் பாஷாவின் மேல் கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார்.

இதில் தீக்காயமடைந்த காதர் பாஷா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் குறித்து M-3 புழல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து , நிலவர் நிஷா ( வயது 48 ) என்பவரை 10.08.2025 அன்று கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்து விட்டதாக மருத்துவமனையில் இருந்த தகவல் கிடைத்ததின்பேரில் , காவல் குழுவினர் மருத்துவமனை சென்று விசாரணை செய்து , காதர் பாஷா இறந்தது உறுதி செய்யப்பட்டு, இறப்பு அறிக்கை பெற்று , இவ்வழக்கின் சட்டப்பிரிவு கொலை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget