மனைவியின் கள்ளத் தொடர்பு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த சோகம் !! சிக்கியது எப்படி ?
உறவுக்கார நபருடன் ஏற்பட்ட கள்ளக் காதலை , தட்டி கேட்ட கணவரை கொலை செய்த மனைவி

கணவனை தீர்த்து கட்ட முடிவு
டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் ( வயது 32) தனது மனைவி அபிராமி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அபிராமிக்கும் அவரது உறவினர் பிரபு என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு குறித்து பிரபாகரன் எச்சரித்த போதிலும், அதை ஏற்காத அபிராமி, தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக் கட்டத் துணிந்து பிரபுவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12 ம் தேதி இரவு கணவனை ஆசையாக பேசி வெளியே அழைத்துச் சென்றுள்ளார் அபிராமி. அங்கே மறைந்திருந்த பிரபு மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர் பிரபாகரனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் கொடுத்து அவரை நிலை குலையச் செய்துள்ளனர்.
சாலை விபத்து போல் சித்தரிப்பு
போதையில் அவர் தன்னை மறந்திருந்த வேளையில், மூவரும் இணைந்து பிரபாகரனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைத்து விபத்து போல் சித்தரிப்பதற்காக சடலத்தைச் சாலையோரம் உள்ள புளிய மரத்தடியில் வீசி விட்டுத் தப்பியுள்ளனர்.
மறுநாள் காலை சடலத்தைக் மீட்ட போலீசார் பிரபாகரனின் மரணத்தில் மர்மம் இருப்பதை உடற்கூறு ஆய்வின் மூலம் உறுதி செய்தனர். விசாரணையின் தொடக்கத்தில் கணவனை இழந்து போல அபிராமி கண்ணீர் மல்க நாடகமாடினாலும் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார்.
இறுதியில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக் கொண்டார். தலைமறைவாக இருந்த பிரபு நீதிமன்றத்தில் சரணடைய, உடந்தையாக இருந்த சரவணனும் கைது செய்யப்பட்டார்.
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்திற்காக, இரு குழந்தைகளின் தந்தை என்றும் பாராமல் கணவனைக் கொன்ற அபிராமியின் செயல் மணப்பாறைப் பகுதியையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.























