மேலும் அறிய

Watch video: சேலத்தில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள்; சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்.

இதே நபர்கள் சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி பகுதிகளில் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள மூங்கப்பாடியை சேர்ந்தவர் சூரியகோபால் இவரது மனைவி பத்மாவதி. இவரின் வயது 73 ஆகும். கணவனை இழந்த இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் உறவினர் ஒருவருடன் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பஜனைமட தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். இந்த பகுதியானது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. எந்த நேரமும் பொது மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் அப்பகுதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். 

Watch video: சேலத்தில் தொடரும் நகை பறிப்பு சம்பவங்கள்; சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்.

அப்போது, பத்மாவதி வருவதை அறிந்த அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் பத்மாவதி அருகில் வந்து அவர் அணிந்திருந்த 4 சவரண் தங்க நகையை பறித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பத்மாவதிக்கு கழுத்தில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. பத்மாவதி கூச்சலிட்டத்தை கண்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து பத்மாவதி செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

 

நகைபறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இருந்ததால் கொள்ளையர்களின் நகைபறிப்பு சம்பவம் அதில் பதிவாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் வாகனத்தை ஓட்டி வந்தவர் தலைகவசம் அணிந்துள்ளார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் தலைகவசம் அணியவில்லை. அவர்தான் நகையை பறித்துள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் காணப்பட்டதில் இதே நபர்கள் சேலம் மாநகரில் கொண்டலாம்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி பகுதிகளில் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்கு முன் நடந்த நகைபறிப்பு சம்பவங்களில் கொள்ளையர்கள் தெளிவாக அடையாளம் காணப்பட முடியாத நிலையில், நேற்று நடந்த சம்பவத்தில் கொள்ளையர்களில் ஒருவர் சற்று அடையாளம் காணும்படி உள்ளதால் இம்முறை கொள்ளையர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில் கொண்டலாம்பட்டி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, அரிசிபாளையம் போன்ற பகுதிகளில் சமீப காலமாக செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த மாதம் அரிசிபாளையம் பகுதியில் இதேபோன்று நகை பறிப்பின் போது இளம்பெண் ஒருவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. காவல்துறை சார்பில் நகரின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் கொள்ளையர்கள் அதனை அறிந்து செயல்பட்டு வருகின்றனர் எனவே காவல் துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget