மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - விட்ட பணம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.

பல ஆயிரம் கோடியில் விளையாடிய நிறுவனம்
 
வேலூரை தலைமை இடமாகக் கொண்டு ஐஎப்எஸ் என்ற பெயரில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் லிமிடெட் நிதி நிறுவனம் கடத்த சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என மாநிலம் முழுவதும் கிளைகளை தொடங்கினர். இதன் பங்குதாரர்கள் மற்றும் சகோதரர்கள் லட்சுமி நாராயணன், தேவ நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் என 4 பேரும் , கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மாநிலம் முழுவதும் 89 ஆயிரம் பேரிடம், ரூ.5,900 கோடி ஐஎப்எஸ் நிறுவனத்தில் முதலீடு பெற்றனர். இதுவரை நேரடியாக புகார் அளித்தவர்களின் கணக்கு பட்டியல் 5900 கோடி என்றாலும், சுமார் 15 லிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடுகளை இந்த நிதி நிறுவனம் பெற்றதாக கூறப்படுகிறது. 

காஞ்சிபுரத்தில் ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - விட்ட பணம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
 
வழக்கை விசாரித்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்
 
இவ்வாறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் நிறுவனங்கள் ஆரம்ப கட்டத்தில், எப்படி சரியாக செயல்பட்டு வருமோ அதே போல், இந்த நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென இந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சில மாதங்கள் பணம் தராமல் நிறுத்தியதாக கூறப்படுகிறது.  இதனால், முதலீட்டாளர்கள் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். பெரிய அளவில் நடந்த பொருளாதார மோசடி என்பதால் வழக்கு, மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார். 
 
 
ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உத்தரவு
 
இதனை அடுத்து காவல்துறையினர் ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள், இயக்குநர்களான லட்சுமி நாராயணன், வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்த்தனன் உட்பட 10 இயக்குநர்கள், 3 முக்கிய ஏஜென்டுகள் என மொத்தம் 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் முக்கிய ஏஜெண்டுகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், நிதி நிறுவனத்தின் 5 பங்குதாரர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
சொத்துக்களை முடக்கி நடவடிக்கை
 
 அதைதொடர்ந்து இந்நிறுவனத்தின் இயக்குனர், ஏஜென்ட் வீடுகள் என 31 இடங்களில் சோதனை நடந்தது. இதில், ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் தங்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த நிறுவனத்தின் 791 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.121.54 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 
மேலும் இருவர் கைது
 
 
 
இந்தநிலையில், காஞ்சிபுரம் அடுத்துள்ள பெரிய கரும்பூர், பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் பிரபு, இவர்கள் இருவரும் சகோதரர்கள். இருவரும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காரை, கோவிந்தவாடி அகரம், பரந்தூர், பொன்னேரிக்கரை, ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் அடிக்கடி வெங்கடேசன் மற்றும் பிரபு ஆகியோரிடம் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு, நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பணம் கட்டியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தரப்படும் என சகோதரர்கள் இருவரும் வாட்ஸப்பில் தகவல் அனுப்பியுள்ளனர்.
 

காஞ்சிபுரத்தில் ஐஎஃப்எஸ் மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - விட்ட பணம் கிடைக்குமா.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
 
இந்த தகவல் வேகமாக பரவ அந்த சுற்றுவட்டார பகுதியில் பணம் கொடுத்து ஏமார்ந்த பொதுமக்கள் அனைவரும் அவர் வீட்டின் அருகே கூடியுள்ளனர். அப்பொழுது முழு தொகை கொடுக்க முடியாது ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே தருவேன் என கூறியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் இருந்த பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் காஞ்சிபுரம் பாலுச்செட்டி காவல் நிலையத்திற்கு தகவல்,  தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து காவல் நிலையத்தில் விசாரித்தனர் . மேலும் இது பொருள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திவரும் வழக்கு என்பதால் , இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து இருவரையும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை அழுத்தி சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றன
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget