மேலும் அறிய

மதுரை : ஆண்களை கண்டாலே பிடிக்கல... சட்டக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது ஏன்?

பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது.

மதுரையில் மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இருமாணவிகள் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் சந்திப்பதையும், செல்போனில் அடிக்கடி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதனிடையே திருநெல்வேலியில் படிக்கும் மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமில்லாத அம்மாணவி திருச்சியில் படிக்கும் மாணவிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளனர். கல்லூரி அடையாள அட்டையை காட்டினால் எளிதாக அறை தந்து விடுவார்கள் என்ற முடிவில் இவர்கள் இங்கு தங்கியுள்ளனர். 

இந்த இருவரில் ஒரு மாணவி தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து மதுரையில் உள்ள தகவலை தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று காலை அந்த சகோதரி காலை போன் செய்தபோது நீண்ட நேரமாக யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு போன் செய்து அப்பெண் விவரம் கூறியுள்ளார்.இதனையடுத்து ஊழியர்கள் அம்மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். 

நீண்ட நேரமாக கதவை யாரும் திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஒரு மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாணவிகள் தங்கியிருந்த அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இவ்வுலகில் ஆண்களை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுடன் எல்லாம் எங்களால் சேர்ந்து வாழ முடியாது. திருமணம் என்ற பெயரில் எங்களை பெற்றோர்கள் பிரிக்க நினைக்கிறார்கள். அதனால் தற்கொலை முயற்சியை எடுக்கிறோம். எங்களை ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
ABP Premium

வீடியோ

Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Embed widget