மேலும் அறிய

மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!

மயிலாடுதுறையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸும் மாநில அளவில் இணக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில், மயிலாடுதுறையில் இன்று அரங்கேறிய வன்முறைச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளைத் திமுகவினர் ஓட ஓட விரட்டித் தாக்கியதோடு, அக்கட்சியின் கொடிகளை நடுரோட்டில் போட்டுச் காலணியால் மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்ற தவெகவினர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் சமீபத்தில் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் தனி பெரும்பான்மையுள்ள தவெகவை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காததால் அவரது செயல்பாடுகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது‌. அதன் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பொறுப்பு கவர்னருக்கு எதிராகக் கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நிறைவடைந்தது.

மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...! pic.twitter.com/XjNeNIGCz5

— JAGANNATHAN (@Jaganathan_JPM) May 8, 2026

">

ஓட ஓட விரட்டப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்ற நிலையில், மாவட்டத் தலைவர் பானுசேகர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் பேருந்து நிலையம் அருகிலேயே குழுவாக நின்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமையில் திரண்டு திமுகவினர், அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திடீரெனப் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடி, சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இந்தத் திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய காங்கிரஸ் கட்சியினர் சாலையில் விழுத்து சிதறி ஓடினர்.

திமுகவினரின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர், பொறுப்பாளர் ராஜா மற்றும் மணல்மேடு அன்பழகன் ஆகியோர் காயமடைந்தனர். குறிப்பாக, தாக்குதலின் போது நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜா என்பவரைத் திமுகவினர் காலால் எட்டி உதைத்ததில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.

கட்சி கொடிகள் அவமதிப்பு: காலால் மிதித்த திமுகவினர்

வன்முறையின் உச்சகட்டமாக, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுகவினர் பிடுங்கி எறிந்தனர். பின்னர், அந்தக் கொடிகளை நடுரோட்டில் வீசி எறிந்து, அவற்றைத் தங்கள் கால்களாலும் காலணிகலும் மிதித்துத் துவம்சம் செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அங்கேயே திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கட்சியின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களை மட்டுமன்றி, அரசியல் நோக்கர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "கூட்டணிக் கட்சியாக இருந்த கட்சி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இப்படிப் பகிரங்கமாக ஒரு தேசியக் கட்சியின் கொடியை அவமதிப்பது முறையா?" என அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget