மேலும் அறிய

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய இரட்டை சகோதரர்கள்.!

இந்த இரட்டை சகோதரர்கள் பகலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வந்தனர். மேலும், கொரானா பரவிய காலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அச்சமின்றி துணிச்சலுடன் அடக்கம் செய்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.  இது தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள் என  பல்வேறு தரப்பினரும்  தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டு பிடிப்பதற்கான தீவிர  நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், காஞ்சிரங்குடி விலக்கு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர்  ஆறுமுகத்தரசன் தலைமையிலான போலீசார்  கீழக்கரை அருகே உள்ள  காஞ்சிரங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகே 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் ஓட முயற்சித்தனர்.
 

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய  இரட்டை சகோதரர்கள்.!
 
இதை அடுத்து உசாரானா  போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் அதில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில்  கீழக்கரையில்  சில்லறையாக விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த  ஏர்வாடி தண்ணீர் பந்தல் முகம்மது (19), கீழக்கரை முகம்மது நசிருதீன் (26), அகமது அசாருதீன் (26), 500 பிளாட்டை சேர்ந்த வாசிம்கான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட முகமது நசுருதீன், முகமது அசாருதீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய  இரட்டை சகோதரர்கள்.!
 
இந்த இரட்டை சகோதரர்கள் பகலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வந்தனர். மேலும்,  கொரானா பரவிய காலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அச்சமின்றி துணிச்சலுடன் அடக்கம் செய்தனர். மற்றும் ஆதரவற்றவர்கள் யாரேனும் சாலைகளில் இறந்து கிடந்ததால் அவர்களை எடுத்து கொண்டு சென்று உடல்களை அடக்கம் செய்வது போன்ற சமூக சேவைகள் செய்து சமுதாயத்தில் நல்ல பெயரை எடுத்து, யாருக்கும் எந்த  சந்தேகம் வராத வகையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்த இரட்டைச் சகோதரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கீழக்கரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய  இரட்டை சகோதரர்கள்.!
 
சமூகத்தில் பொது மக்களுக்காக சேவை செய்து நன்மதிப்பைப் பெற்றவர்கள் கஞ்சா வழக்கில் சிக்கியிருப்பது கஞ்சா விற்பனையின்  தீவிரத்தை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. எனவே, மாவட்ட காவல்துறையினர் அதி தீவிர நடவடிக்கை எடுத்து கீழக்கரை பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்  கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் விற்பனை கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget