மேலும் அறிய

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய இரட்டை சகோதரர்கள்.!

இந்த இரட்டை சகோதரர்கள் பகலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வந்தனர். மேலும், கொரானா பரவிய காலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அச்சமின்றி துணிச்சலுடன் அடக்கம் செய்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.  இது தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள் என  பல்வேறு தரப்பினரும்  தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டு பிடிப்பதற்கான தீவிர  நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், காஞ்சிரங்குடி விலக்கு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, கீழக்கரை சப்-இன்ஸ்பெக்டர்  ஆறுமுகத்தரசன் தலைமையிலான போலீசார்  கீழக்கரை அருகே உள்ள  காஞ்சிரங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காஞ்சிரங்குடி பஸ் ஸ்டாப் அருகே 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் ஓட முயற்சித்தனர்.
 

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய இரட்டை சகோதரர்கள்.!
 
இதை அடுத்து உசாரானா  போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று மடக்கி பிடித்து கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் அதில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில்  கீழக்கரையில்  சில்லறையாக விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த  ஏர்வாடி தண்ணீர் பந்தல் முகம்மது (19), கீழக்கரை முகம்மது நசிருதீன் (26), அகமது அசாருதீன் (26), 500 பிளாட்டை சேர்ந்த வாசிம்கான் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட முகமது நசுருதீன், முகமது அசாருதீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய இரட்டை சகோதரர்கள்.!
 
இந்த இரட்டை சகோதரர்கள் பகலில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வந்தனர். மேலும்,  கொரானா பரவிய காலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை அச்சமின்றி துணிச்சலுடன் அடக்கம் செய்தனர். மற்றும் ஆதரவற்றவர்கள் யாரேனும் சாலைகளில் இறந்து கிடந்ததால் அவர்களை எடுத்து கொண்டு சென்று உடல்களை அடக்கம் செய்வது போன்ற சமூக சேவைகள் செய்து சமுதாயத்தில் நல்ல பெயரை எடுத்து, யாருக்கும் எந்த  சந்தேகம் வராத வகையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்த இரட்டைச் சகோதரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கீழக்கரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 

நீ ஊதவே வேணாம்...! பகலில் சமூகசேவை; இரவில் கஞ்சா விற்பனை - சிக்கிய இரட்டை சகோதரர்கள்.!
 
சமூகத்தில் பொது மக்களுக்காக சேவை செய்து நன்மதிப்பைப் பெற்றவர்கள் கஞ்சா வழக்கில் சிக்கியிருப்பது கஞ்சா விற்பனையின்  தீவிரத்தை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. எனவே, மாவட்ட காவல்துறையினர் அதி தீவிர நடவடிக்கை எடுத்து கீழக்கரை பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்  கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் விற்பனை கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget