மேலும் அறிய

திரிபுரா: பேஸ்புக் பழக்கத்தில் ஏமாற்றி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. நடந்த என்ன?

புர்பா கோகுல்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது கூட்டு பாலியல் வன்கொடுமையில் சென்று முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

பேஸ்புக் காதல்

இச்சம்பவம் புதன்கிழமை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்துள்ளது மற்றும் முக்கிய குற்றவாளியான 21 வயதுடைய இளைஞர், அந்த பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாக பழகியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அதன் பின் இதுபோன்ற அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்ததாக போலீசார் குறி்ப்பிட்டுள்ளனர். மேலும் புர்பா கோகுல்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.

திரிபுரா: பேஸ்புக் பழக்கத்தில் ஏமாற்றி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. நடந்த என்ன?

வற்புறுத்தி புகைப்படம்

"முக்கிய குற்றவாளி, அந்த பெண்ணை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் வந்து சந்திக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். கட்டாயத்தின் பேரில் வந்து சந்தித்த பெண்ணை வற்புறுத்தி சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த பெண் அதனை மறுத்தாலும் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்ததால், தான் பிளாக்மெயில் செய்யப்படுவதை உணர்ந்த அந்த பெண், சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார், ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை" என்று உதய்பூரின் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் நிருபம் தத்தா பிடிஐயிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்: Maamannan Audio Launch Vadivelu Speech: இனி அரசியலில் உதயநிதி ஹீரோ.. என்னை ரஹ்மான் பாடவைத்தார்... வடிவேலு அதிரடி..

கூட்டு பாலியல் வன்கொடுமை

முக்கிய குற்றவாளி 17 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக நிருபம் தத்தா மேலும் கூறினார். அந்த இளைஞருடன் சேர்ந்து மற்ற இரண்டு நண்பர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அன்று மாலை வரை சிறுமியின் மீதான சித்திரவதை தொடர்ந்துள்ளது. "வீடு திரும்பியபோது, மூன்று பேரும் ராஜர்பாக் பகுதியில், காரில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கி எறிந்துவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றனர்." என்று மாஜிஸ்திரேட் மேலும் தெரிவித்தார்.

திரிபுரா: பேஸ்புக் பழக்கத்தில் ஏமாற்றி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. நடந்த என்ன?

வழக்குப்பதிவு

பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆர்.கே.பூர் மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இந்த வழக்கிற்கான எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சிறுமியும் முக்கிய குற்றவாளியும் கடந்த 6 மாதங்களாக ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்ததாகவும், அந்த இளைஞர் தனது உண்மையான அடையாளத்தை அந்த பெண்ணிடம் மறைத்ததாகவும் அவர் கூறினார். "இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, தலைமறைவான இரு குற்றவாளிகளையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று தத்தா கூறினார். இந்த சம்பவத்திற்கு திரிபுரா மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்னாலி கோஸ்வாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சமூக ஊடக தளம் மூலம் மைனர் பெண்கள் பலர், சில இளைஞர்களின் பிடியில் சிக்குவதை நாங்கள் அவதானித்து வருகிறோம். ஆன்லைன் நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு, சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
"டீ சூப்பர்" பற்றி எரியும் முர்ஷிதாபாத்.. உள்ளூர் எம்பி யூசுப் பதான் பதிவால் காண்டான மக்கள்
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு”  அன்புமணி அதிரடி
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு” அன்புமணி அதிரடி
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Policeநடிகர் ஶ்ரீ-க்கு என்ன ஆச்சு?ஆடை இல்லாமால் வீடியோ பாலின மாற்று சிகிச்சையா? : Sri BluetickAmit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
"டீ சூப்பர்" பற்றி எரியும் முர்ஷிதாபாத்.. உள்ளூர் எம்பி யூசுப் பதான் பதிவால் காண்டான மக்கள்
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு”  அன்புமணி அதிரடி
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு” அன்புமணி அதிரடி
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
WTA 250: என்னப்பா ரெடியா..! சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி - என்ன விளையாட்டு? எங்கு? எப்போது?
WTA 250: என்னப்பா ரெடியா..! சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி - என்ன விளையாட்டு? எங்கு? எப்போது?
திருச்சி, சுற்றுவட்டார இளைஞர்களுக்கு தரமான வாய்ப்பு; பாதை விரித்த பிரபல ஐடி நிறுவனம்- இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா?!
திருச்சி, சுற்றுவட்டார இளைஞர்களுக்கு தரமான வாய்ப்பு; பாதை விரித்த பிரபல ஐடி நிறுவனம்- இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா?!
காமுகனா போதகரா? கேரளாவில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை தட்டி தூக்கிய காவல்துறை!
காமுகனா போதகரா? கேரளாவில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை தட்டி தூக்கிய காவல்துறை!
TN Medical College: இல்லாத மாவட்டமே இல்லை..! தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் - எங்கெங்கு தெரியுமா?
TN Medical College: இல்லாத மாவட்டமே இல்லை..! தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் - எங்கெங்கு தெரியுமா?
Embed widget