மேலும் அறிய

Crime: பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி - வாலிபர் போக்சோவில் கைது

வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அவரது உறவினரான புள்ளமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகிலன் (வயது 19) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அவரது வீட்டுக்குள் புகுந்த முகிலன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு உள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்ப்பதற்குள் அங்கிருந்து முகிலன் தப்பி ஓடி விட்டான். 
 
அதனை அடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதனை அடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து முகிலன் பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர் அப்போது முகிலனின் பெற்றோருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து வடபாதிமங்கலம் காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் முகிலன் மீது போட்டோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதே போன்று சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இது குறித்து மாவட்ட காவல் துறை சார்பில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் காவல்துறை உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதே போன்ற விஷயங்களில் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமே தவிர தற்கொலை என்பது தீர்வு அல்ல என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget