மேலும் அறிய

Crime: பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி - வாலிபர் போக்சோவில் கைது

வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அவரது உறவினரான புள்ளமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகிலன் (வயது 19) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அவரது வீட்டுக்குள் புகுந்த முகிலன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு உள்ளார். மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்ப்பதற்குள் அங்கிருந்து முகிலன் தப்பி ஓடி விட்டான். 
 
அதனை அடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதனை அடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து முகிலன் பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர் அப்போது முகிலனின் பெற்றோருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து வடபாதிமங்கலம் காவல்துறையினர் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் முகிலன் மீது போட்டோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதே போன்று சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இது குறித்து மாவட்ட காவல் துறை சார்பில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் காவல்துறை உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதே போன்ற விஷயங்களில் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து அதற்கு உரிய தீர்வு காண வேண்டுமே தவிர தற்கொலை என்பது தீர்வு அல்ல என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Embed widget