மேலும் அறிய

மதுபோதையில் முதியவர் ரகளை; தான் வெட்டிய அரிவாளால் வெட்டப்பட்டு இறந்த சோகம்

நெல்லை அருகே கோயிலுக்கு சென்று வந்த மனைவியை வெட்டிய ஆத்திரத்தில் கணவர், முதியவரை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நெல்லை மாவட்டம் மேலக்குளம் அருகே நடுவூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62). இவரின் மனைவி சண்முகலட்சுமி (50). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு அங்குள்ள கோவிலுக்கு சென்று சாமி  கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பையா (70) என்பவர் மது போதையில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு தெருவில் வருபவர்களை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் கோவிலுக்கு சென்று வருவதை பார்த்த சுப்பையா, சண்முகலட்சுமியை பார்த்து அவதூறாக பேசியுள்ளார். இதனை கேட்ட சண்முகலட்சுமி அவரை கண்டித்துள்ளார். போதையில் இருந்த சுப்பையா தன்னை கண்டித்ததும் ஆத்திரத்தில் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சண்முகலட்சுமியை வெட்டியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். சுப்பையாவிடமிருந்து மனைவி காப்பாற்ற தடுத்ததில் அவருக்கும் 2 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அந்த அரிவாளை பிடுங்கி சுப்பையாவை சரமாரியாக வெட்டினார். இதில் முதலில் சுப்பையா இரத்த வெள்ளத்தில் அங்கேயே கீழே சரிந்தார். தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் பலத்த வெட்டுக்காயத்துடன் அவர்களும் தெருவிலேயே சரிந்து விழுந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. தகவலறிந்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சுப்பையா உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சண்முகலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதியை வழிமறித்து குடிபோதையில் ரகளை செய்து அவர்களை அரிவாளால் வெட்டியதுடன் தானும் அதே அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம்  நெல்லையில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget